பொள்ளாச்சி வழக்கு……! மூடிய நீதிமன்ற அறையில் சாட்சியிடம் விசாரணை…..!

கடந்த 2019 ஆம் வருடத்தில் பொள்ளாச்சியை ஒட்டி உள்ள பகுதிகளில் கல்லூரி மாணவிகளை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான வீடியோ தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட ஒரு மாணவியரின் சகோதரர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்து அந்த வழக்கை முதலில் தமிழக காவல்துறையும் அதன் பிறகு சிபிசிஐடி பிரிவு விசாரித்து வந்தனர். இதில் திருநாவுக்கரசு, சபரி, ராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், பொள்ளாச்சி, அருளானந்தம், ஹேரேன்பால், பாபு, அருண்குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.


இந்த வழக்கு அதன் பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் 9 பேர் மீது தனியாக வழக்கு பதிவு செய்த சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது. இந்த சூழ்நிலையில், கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேதி வந்து நேற்று முன்தினம் காணொளியின் மூலமாக விசாரணை நடந்தது. கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்ற 9 பேரும் காணொளியின் மூலமாக ஆஜராகினர்.

அரசு தரப்பு சாட்சி நேரில் ஆஜரானவுடன் இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதியிடம் விளக்கம் அளித்தார். குறிப்பிட்ட இந்த சாட்சி விசாரணை மூடிய நீதிமன்ற அறையில் நடந்தது. மற்றொரு சாட்சி அடுத்த மாதம் 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Next Post

இந்தியாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்.. 4,000 கோழிகள், வாத்துக்களை அழிக்கும் பணி தொடக்கம்..

Sun Feb 26 , 2023
பறவைக் காய்ச்சல் பரவலால், கோழிகள் மற்றும் வாத்துகள் உட்பட சுமார் 4,000 பறவைகளை அழிக்கும் செயல்முறையைப்பதற்கான செயல்முறையை ஜார்கண்ட் மாநில அரசி தொடங்கி உள்ளது.. ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் அரசு நடத்தும் கோழிப்பண்ணையில் H5N1, பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.. அந்த பண்ணையில் 800 பறவைகள் இறந்ததாகவும், 103 பறவைகள் அழிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இதைத் தொடர்ந்து “பண்ணையை 1 கிமீ சுற்றளவில் பாதிக்கப்பட்ட பகுதியில் கோழிகள் […]
7d81ebc8fd4104973615f7731155fb2d50fd825cb60f99863e5a7f0f471d0727

You May Like