சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) சில முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. மின் வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளன. பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள்:
கே.கே. நகர் பகுதியில், காவேரி ரங்கன் நகர், கே.கே. சாலை, லோகையா காலனி, தசரதபுரம், ஆற்காடு சாலை, பாலாஜி நகர், பாஸ்கர் காலனி, மதியழகன் நகர், அருணாச்சலம் சாலை, குமரன் காலனி, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மேலும் தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை, பரணி காலனி, காவேரி மருத்துவமனை தெரு, சூர்யா தெரு, 80 அடி சாலை, எம்.ஜி.சக்கரபாணி தெரு, பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளும் இதில் அடங்கும்.
பாலவாக்கம் பகுதியில், காமராஜர் சாலை பிரதான சாலை, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனியின் 1 மற்றும் 2-வது தெருக்கள், கந்தசாமி நகர் 1 முதல் 7-வது தெருக்கள், மணியம்மை தெரு, திருவான்மியூர் அவ்வை நகர், வெங்கடேசபுரம், கண்ணப்பன் நகர் மற்றும் பாரதி நகர் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.
பல்லாவரம் பகுதியில், பம்மல் பிரதான சாலை, ஆடுத்தொட்டி, கிருஷ்ணா நகர், முத்தமிழ் நகர், என்.எஸ்.கே. தெரு, நடராஜன் தெரு, பிருந்தாவன் காலனி, கென்னடி தெரு மற்றும் மூங்கலேரி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். எனவே, மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மின் தடையை கருத்தில் கொண்டு தங்களது அத்தியாவசிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது.
Also Read:SBI-யில் 9,766 கிளார்க் வேலைவாய்ப்பு… மாதம் ரூ.39,000 சம்பளம்! பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!



