இந்திய 2வது பெண் குடியரசு தலைவராக பொறுப்பேற்று இருப்பவர் திரௌபதி முர்மு. இவர் ஒரு பழங்குடி இனத்தை சார்ந்தவர். இவர் சார்ந்த கிராமம் தற்போது தான் மெல்ல, மெல்ல முன்னேறி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு திரவுபதி முர்மு முதன்முறையாக 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகத்திற்கு வருகிறார் டெல்லியில் இருந்து காலை 8:30 மணி அளவில் பெறப்பட்டு விமான நிலையத்திற்கு காலை 11 40 மணியளவில் வருகை தரும் குடியரசு தலைவரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி வரவேற்கின்றார்.
அதேபோல காலை 11:50 மணி அளவில் விமான நிலையத்திலிருந்து குடியரசு தலைவர் காரில் புறப்படுகின்றார். பெருங்குடி, அவனியாபுரம், வில்லாபுரம், தெற்கு வாசல், கீழ்வாசல் சந்திப்பு, விளக்குத்தூண் வெண்கலகடை தெரு வழியாக கிழக்கு சித்திரை வீதிக்கு மதியம் 12.05 மணியளவில் வந்து சேர்கிறார் குடியரசு தலைவர் பின்னர் 12.15 மணியளவில் அம்மன் சன்னதி பகுதியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன் பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கின்ற குடியரசுத் தலைவர் விமான நிலைய பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், அர்ச்சகர்கள் போன்றோருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
விமான நிலையம் முதல் மீனாட்சியம்மன் கோவில் வரையில் 11 கிலோ மீட்டர் தொலைவிற்கு இருக்கின்ற சாலைகள் முழுவதும் சீரமைக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், நகரில் அனுமதி இல்லாமல் ட்ரோன் கேமரா பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன் பிறகு அங்கிருந்து விமான மூலமாக கோவை செல்லும் குடியரசுத் தலைவர் மாலை 6 மணி அளவில் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்கின்றார்.
இன்று இரவு கோவையில் ஓய்வெடுக்கும் அவர், நாளை நீலகிரி முப்படை பயிற்சி கல்லூரி வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கொள்கின்றார். அதன் பின்னர் மாலை 4 மணியளவில் அவர் டெல்லிக்கு திரும்புகிறார்.
குடியரசு தலைவர் வருவதை முன்னிட்டு மதுரை கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் ஐந்தடுக்கு காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மதுரையில் 2000 காவலர்களும், கோவை மற்றும் நீலகிரியில் 5000 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.