உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுக்கடை ஒன்றை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்று கூடி சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் சன்டோலி கிராமத்தில் மதுக்கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மது கடையில் அங்குள்ள கிராமவாசிகள் மது அருந்துவது வழக்கம். இந்த மதுக்கடையில் அடிக்கடி தகராறுகள் நடப்பதும் உண்டு. இதனைத் தொடர்ந்து மது போதையில் ஏற்பட்ட தகராறில் அந்த கிராமத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அந்த மது கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் மதுக்கடையை அந்த பகுதியில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்துமாறு கோஷங்களை எழுப்பினர். அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள் கடைக்குள் புகுந்து அங்கிருந்த மது பாட்டில்களை உடைக்க ஆரம்பித்தனர். அந்த மதுக்கடையையும் அடித்து உடைத்தனர். மேலும் அங்கிருந்த ஊழியர்களையும் தாக்கினர். இதனால் அந்த பகுதி பெரும் போர்க்களமாக காட்சியளித்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானம் செய்யும் என்றனர். ஆனால் பொதுமக்கள் காவல்துறையின் பேச்சை கேட்பதாக இல்லை. அவர்கள் தொடர்ந்து மதுக்கடையை தாக்கினர் மேலும் அப்பகுதியில் இருக்கும் மதுக்கடையை அப்புறப்படுத்த கோரியும் காவல்துறையிடம் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். காவல்துறை மிகவும் சிரமப்பட்டு பொதுமக்களை மதுக்கடையில் இருந்து வெளியேற்றியது. மேலும் காயமடைந்த மதுக்கடை ஊழியர்களையும் உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் மதுக்கடையில் இருந்து பணம் திருடு போய் உள்ளதாக மது கடை நிர்வாகம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் காவல்துறையினர் இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என இரண்டு தரப்பிலும் தெரிவித்திருக்கின்றனர். மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட முற்றுகைப் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக மாறி மதுக்கடை சூறையாடப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. ஆனால் காவல்துறை விரைவாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது இருதரவிடமும் பெயர்ச்சி வார்த்தை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்து போன இளைஞனுக்கு நீதி கிடைக்கும் வரை இந்த விஷயத்தை விடப்போவதில்லை என கிராம மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.