தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை – கடைசியாக அனுப்பப்பட்ட மெஸேஜ்! காவல்துறை விசாரணை!

புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலைச் சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரி அருகேயுள்ள காரைக்காலை சார்ந்தவர் முருகன்(45) இவருக்கு நான்கு பெண் குழந்தைகள். அவர்களில் ஒருவர் வஸ்மிதா. இவர் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்பிய வஸ்மிதா தனது அருகில் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரமாகியும் அறை கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரிகளும் தந்தையும் கதவைத் தட்டி இருக்கின்றனர். அப்போதும் திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது தந்தை கதவை உடைத்துக் கொண்டு திறந்தபோது தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார் வஸ்மிதா. இதனால் அதிர்ந்து போன குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவருக்கு சுரேஷ் என்ற காதலன் இருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இறப்பதற்கு முன்னர் என்னால் இனி யாருக்கும் தொந்தரவு வராது என காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்தது. குடும்பத்தினரை பெறும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

ஆணுறையுடன் வாழைப்பழத்தை சாப்பிட்ட நபர்.. பகீர் காரணம்.. இறுதியில் நடந்த அதிசயம்.!

Tue Jan 31 , 2023
தன்னுடைய வினோதமான செய்கையினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மாட்டிக் கொண்ட இளைஞர் மூன்று நாட்கள் கழித்து உயிருடன் மீண்ட சம்பவம் அமெரிக்காவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவைச் சார்ந்த 34 வயது இளைஞர் ஒருவர் வயிற்று வலியால் அவதிப்படவே மருத்துவர்களின் உதவியை நாடியிருக்கிறார். அப்போது அவரின் வயிற்றை சிடி ஸ்கேன் எடுத்துள்ள மருத்துவர்கள் அவரது சிறுகுடலில் ஆணுறையால் சூழப்பட்ட வாழைப்பழம் இருப்பதை கண்டறிந்தனர். மூன்று நாட்கள் நடைபெற்ற மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு […]
IMG 20230131 WA0037

You May Like