Radhika | ”விஜய பிரபாகரன் எனக்கும் ஒரு மகன் தான்”..!! எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..!! நடிகை ராதிகா சரத்குமார் பேட்டி..!!

தனக்கு எதிராக போட்டியிடும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தனக்கும் ஒரு மகன் போலத்தான் என விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார், சிவகாசி கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியை நான் தேர்ந்தெடுக்கவில்லை. பாஜக தலைமையில் இருந்து தேர்ந்தெடுத்து என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். விருதுநகர் தொகுதி மக்களுக்கு செய்வதற்கு நிறைய உள்ளது. மக்களுக்கு தேவையானதை நான் செய்வேன்.

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் எனது மகளுடன் படித்த பையன். எனக்கும் ஒரு மகன் போலத்தான். அவர் நன்றாக இருக்க வேண்டும். நடக்க இருக்க கூடிய தேர்தல் சட்டமன்றத் தேர்தல் அல்ல நாடாளுமன்றத் தேர்தல். நாடு இந்த தேர்தலில் நமக்காக என்ன செய்ய உள்ளது என்பதை தான் பார்க்க வேண்டும். நல்ல திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் பட்டாசு தொழிலை மேம்படுத்த இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். எனக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது” என்று கூறினார்.

Read More : Lok Sabha | ”ஐயா வாங்க.. அம்மா வாங்க”..!! ”நான் எல்லோருக்கும் வேட்டு வைக்கப் போறேன்”..!! மன்சூர் அலிகான் அதிரடி

Chella

Next Post

தற்கொலைக்கு முயன்ற மதிமுக எம்பி கணேசமூர்த்தி..!! சுயநினைவின்றி ஐசியூவில் தீவிர சிகிச்சை..!!

Mon Mar 25 , 2024
மதிமுகவை சேர்ந்த ஈரோடு எம்.பி. கணேச மூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அவர் கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈரோடு மதிமுக எம்பி-யை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சென்று நலம் விசாரித்தார். கணேசமூர்த்தி எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்ற காரணம் தெரியவில்லை என்றும், தற்போது ஐசியூவில் தீவிர சிகிச்சையில் உள்ள […]

You May Like