Rain Alert: 18, 19, 20, 21 தேதிகளில் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை…!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் 18, 19, 20, 21 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். வரும் 19-ம் தேதி வரை தென் தமிழகம் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்க வாய்ப்புள்ளது‌.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களில் லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதே போல வரும் 18, 19 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 20, 21 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது ‌

Vignesh

Next Post

ஐஸ்கிரீம் எச்சரிக்கை!… தொண்டை வலி வந்தால் அலட்சியம் வேண்டாம்!… இந்த காய்ச்சல் அபாயம்!

Tue Apr 16 , 2024
Ice cream: ஐஸ்கிரீம் என்று நினைத்தவுடன் வாயில் தொடங்கி வயிறுவரை குளிர்ந்துபோனதுபோன்ற உணர்வு. அதிலும் இந்தக் கோடை வெப்பத்தில் ஜில்லென்று எதாவது சாப்பிடலாமா என்று மனசும் உடலும் அலைபாயும். கோடை காலம் வந்தாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவார்கள். வெயிலுக்கு இதமாக இருக்கும் இது சுவையாகவும் இருக்கும். இன்றும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது அனைவரும் குழந்தைகளாகவே மாறி விடுகிறோம். கோடையை சமாளிக்க ஒரு புறம் […]

You May Like