விமானத்தில் புகைபிடித்த நபர்….! அதிரடியாக கைது செய்த பெங்களூரு காவல்துறை…!

விமானத்தில் பயணம் செய்யும்போது விதிமுறை நேரில் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன அதிலும் குறிப்பாக மது போதையில் சக பயணிகளிடம் ரகளை செய்வது, விமான பணி பெண்களிடம் சில்மிஷம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு பதற்றத்தை ஏற்படுத்தும் பயணிகளை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்து தண்டனை வழங்கி வருகின்றன. இது போன்ற அத்துமீறல் சம்பவம் பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் உள்ள நார்வர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரையில் ஏர் ஆகாசா என்ற விமானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயணம் செய்திருக்கிறார். தன்னுடைய சொந்த வேலைக்காக பிரவீன் குமார் பெங்களூருக்கு சென்ற நிலையில், இவருடன் மற்றொரு வயதான உறவினரும் வந்ததாக கூறப்படுகிறது.

இதுவரையில் விமானத்தில் பயணம் செய்யாத பிரவீன் குமாருக்கு தன்னுடைய முதல் விமான பயணமே மறக்க முடியாத அனுபவமாக மாறிப்போனது. அதாவது, விமானம் புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் உள்ள கழிவறைக்கு சென்ற பிரவீன் தன்னிடம் இருந்த பீடியை எடுத்து பற்ற வைத்து புதைக்க தொடங்கி இருக்கிறார். தீ விபத்து அச்சம் காரணமாக, விமானத்திற்குள் புகைபிடித்தல் உள்ளிட்ட செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் முதல் முறையாக பயணம் செய்யும் பிரவீனுக்கு இது தெரியவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் பிரவீன் புகை பிடித்தது ட்யூட்டி மேனேஜர் விஜய் துலுரு குமார் கவனத்திற்கு வந்தது. அவருடைய புகாரின் அடிப்படையில், பெங்களூரு காவல்துறையினர் பிரவீனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நான் அடிக்கடி ரயிலில் பயணம் செய்வேன், அப்போதெல்லாம் கழிவறையில் பீடி குடிப்பேன். அப்படித்தான் விமானத்திலும் செய்தேன் என்று அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.

ஆனால் விமானத்திற்குள் நுழைவதற்கு முன்னதாகவே கடுமையான சோதனைகள் நடைபெறும் என்ற சூழ்நிலையில், பிரவீன் எப்படி எடுத்து வந்தார்? என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன அகமதாபாத் விமான நிலையத்தில் சரியான பாதுகாப்பு சோதனை நடத்தப்படவில்லை என்று முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட பிரவீன் ஒரு வார கால நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

Next Post

கேட்ட வரதட்சணையை கொடுக்காததால் ஆத்திரமடைந்த கணவர்…..! என்ன செய்தார் தெரியுமா…? அதிர்ச்சியில் உறைந்த மனைவி…..!

Thu May 18 , 2023
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தின் எருமப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செபி (33) இவருக்கும் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 2 1/2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று இருக்கிறது. திருமணத்தின் போது பெண் வீட்டார் 80 கிராம் தங்க நகையை மணமகன் மீட்டருக்கு வரதட்சணையாக கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் திருமணம் ஆன சில மாதங்களிலேயே வரதட்சணை போதவில்லை என்று மனைவியை கணவர் கொடுமைப்படுத்தி வந்ததாக […]
’இளைஞர்களே இளம்பெண்களே’..!! திருமண மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி..? சைபர் கிரைம் எச்சரிக்கை..!!

You May Like