முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு தினம்….! சோனியா மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் அஞ்சலி…..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவருடைய நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.


முன்னதாக ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோறும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளான இன்றைய தினம் ராஜீவ் காந்தியின் கடைசி பிரச்சாரக் களமான ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவருடைய பயணம் திடீரென்று ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு கடந்த 1991 ஆம் வருடம் தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை தந்த ராஜீவ்காந்தி குண்டு வைத்து கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

நாட்டில் நோய் தொற்று பரவலின் தற்போதைய நிலவரம் என்ன….? மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை….!

Sun May 21 , 2023
நாட்டில் நோய் தொற்று நிலவரம் தொடர்பாக நாள்தோறும் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்றைய தினம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அது தொடர்பான அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்திற்கு புதிதாக 756 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி நாட்டில் நோய் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,49,86,,461 இன்று அதிகரித்திருக்கிறது. அதோடு நோய் தொற்று காரணமாக, ஒரே நாளில் 8 […]
covid19 1600x900 6

You May Like