தற்போது நாட்டில் என்ன நடக்கிறது தனிமனித ஒழுக்கம் எங்கே சென்றது? என்று பலவித கேள்விகள் மக்கள் மனதில் ஏழத் தொடங்கியுள்ளது.
தற்போதைய இளைய சமுதாயத்தினரிடம் தனிமனித ஒழுக்கம் என்பதே அறவே இல்லாமல் போய்விட்டது. அதிலும் தற்போதைய இளம் சமுதாயத்தினர் பாலியல் குற்றங்களில் அதிகமாக ஈடுபட்டு வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.
கோயமுத்தூர் மாவட்டம் வடவள்ளியை அடுத்துள்ள காளம்பாளையம் பகுதியைச் சார்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் அவருடைய வீட்டிற்கு வெளியே இருக்கின்ற பாத்ரூமில் நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய அண்டை வீட்டை சார்ந்த வாலிபர் ஒருவர் தன்னுடைய கைபேசியில் இந்த பெண் குளிப்பதை விதவிதமாக வீடியோ எடுத்திருக்கிறார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் உடனடியாக கூச்சலிட்டார். இளம் பெண்ணின் சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் ஓடோடி வந்தனர்.
அந்த சமயத்தில்அந்த குளியலறையின் அருகிலிருந்து ஒரு வாலிபர் வேகமாக ஓடுவதை பொதுமக்கள் கவனித்திருக்கின்றனர். உடனடியாக பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து அடித்து, உதைத்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்டவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அதோடு அவருடைய கைபேசியை ஆய்வு செய்திருக்கிறார்கள்.
விசாரணையில், அந்த வாலிபர் காளம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரகுமார்(29) என்பதும், பிளம்பராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.