சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அஜய் என்கின்ற பம்பு அஜய்( 23) காவல்துறையினரின் ரவுடிகள் பட்டியலில் இவருடைய பெயரும் இருக்கிறது. மேலும் இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட சுமார் 15 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி புது வண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் நண்பர்களுடன் அவர் மது அருந்தியதாக சொல்லப்படுகிறது.
அப்போது நண்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டாகி அது மோதலாக வெடித்தது. இதில் ஆத்திரம் கொண்ட அஜய் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி குத்தி விடுவதாக மிரட்டி இருக்கிறார். ஆனால் ஆத்திரம் கொண்ட அவருடைய நண்பர்கள், அந்த கத்தியை பிடுங்கி அவரையே சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதன்பிறகு அஜய்யின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த பகுதியில் ஒன்று திரண்டனர்.
ஆகவே இது குறித்து புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அதையே மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த கொலையாளிகளை பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து முதல் கட்டமாக 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றன.