சேலம் மாவட்டம் மேட்டூர் காவேரி பாலம் பகுதியில் லோகநாயகி என்பவர் தன்னுடைய குழந்தைகளுடன் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தான் மேட்டூர் மருத்துவமனை காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் நவீன்குமார் (28) என்ற வாலிபர் அறிமுகமானார்.
அதன் பிறகு அந்த வாலிபர் லோகநாயகியின் குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் நன்றாக பழகி வந்தார். இத்தகைய சூழ்நிலையில், கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் 7ஆம் தேதி லோகநாயகியின் கைபேசியில் சார்ஜ் இல்லாததால் நவீன் குமாரிடம் தன்னுடைய செல்போனுக்கு சார்ஜ் போட்டு கொடுக்குமாறு கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆகவே நவீன்குமாரும் லோகநாயகியின் செல்போனுக்கு சார்ஜ் போட்டு அவருடைய மகளான 12 வயது சிறுமியிடம் கைபேசியை கொடுத்து அனுப்புவதாக சொல்லி அந்த சிறுமியை அழைத்துச் சென்றார். மேலும் அந்த சிறுமியை மேட்டூர் நகராட்சி குப்பை கொட்டும் குடவுனுக்கு அழைத்துச் சென்ற நவீன்குமார் அங்கே அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக அந்த சிறுமி தன்னுடைய தாய் லோகநாயகியிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான யோகநாயகி, மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி நவீன்குமார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஓசோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நவீன் குமாருக்கு ஆயுள் தண்டனையும், 10000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.