இன்று பள்ளிகள் திறப்பு… பேருந்துகளை இயக்குவதற்கான நடைமுறை…! போக்குவரத்து துறை உத்தரவு…!

school 2025

கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, “பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தால் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி மாணவர்களை பேருந்தின் உள்ளே வரவழைத்த பின் பேருந்தை இயக்க வேண்டும்” என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.


கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு திறப்புக்காக பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோடை விடுமுறை முடிந்து, இன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, “பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணம் செய்தால் பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தி மாணவர்களை பேருந்தின் உள்ளே வரவழைத்த பின் பேருந்தை இயக்க வேண்டும்” என ஓட்டுநர், நடத்துநர்களுக்கு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும். 2025-26 கல்வியாண்டில் மாணவர் /மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி மற்றும் கல்லூரியிலேயே அவர்களின் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கு, அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் 2024-25 கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Read More: முதல் நாளே புத்தகம்… கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று முதல் திறப்பு…!

Vignesh

Next Post

திங்கள் கிழமை பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களின் பலம் மற்றும் பலவீனம் என்ன தெரியுமா?

Mon Jun 2 , 2025
திங்கட்கிழமை பிறந்தவர்கள் அறிவாற்றல் மற்றும் பகுப்பாய்வு போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் கற்றுக்கொள்வதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்களாகவும், தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அடிக்கடி ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் வலுவான நிர்வாக திறமை கொண்டவர்களாக இருப்பர். இது வணிகம், மேலாண்மை போன்ற தொழில்களில் அவர்களை திறம்பட செய்ய முடியும். திங்களன்று பிறந்தவர்கள் சந்திரன் கிரகத்துடன் தொடர்புடையவர்கள், இது எண் கணிதத்தில் உணர்ச்சிகள், மனநிலைகள் மற்றும் உள்ளுணர்வு ஆகியவற்றைக் […]
monday born baby 11zon

You May Like