fbpx

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் தன்னுடைய ஆண் நண்பரோடு காரில் பயணிக்கும் போது ராங் ரூட்டில் சென்று எதிரே வந்த போலீசார் வாகனத்தின் மீது மோதியதால் அந்த போலீசார் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.சமீபத்தில் தான் நடிகை …

தமிழ்நாட்டில் பாஜக கட்டமைத்துள்ள 3-வது அணியில் ஜான் பாண்டியனும் இணைந்துள்ளார். இதன் மூலம் சிறிய கட்சிகளை ஒவ்வொன்றாக இணைத்து கூட்டணியை பலமாக்குகிறது பாஜக.

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய அளவில் பலமாக கூட்டணியை அமைத்துள்ள பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் தடுமாறி வருகிறது. அக்கூட்டணியில் இருந்த அதிமுக, வெளியேறி விட்ட நிலையில் வலுவானக் கட்சிகள் …

அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், ”பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும் என்றும் கருணை அடிப்படையில் மற்ற துறைகளில் அரசுப் …

மத்திய அரசின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிஎம் கிசான் திட்டமானது நாடு முழுவதும் இந்திய அரசின் நிதி உதவியில் செயல்படுத்தப்படுகிறது. 2018ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டமானது, உலகிலேயே மிகப்பெரிய நேரடி பயன் பரிமாற்றங்களில் (DBT) ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகள் தங்களது விவசாயத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உதவியாக இந்த தொகை …

priya mani: விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கியுள்ள பருத்திவீரன் பிரபலம் பிரியாமணி, அதனை தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பருத்திவீரன்’ படத்தில் முத்தழகாக நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை பிரியாமணி. இப்போது திருமணத்திற்குப் பிறகு மும்பையில் செட்டி ஆகியுள்ளவர் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்துகிறார். இதுமட்டுமல்லாது, …

தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், “தென்னிந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பிப்ரவரி 27ஆம் தேதி தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் …

தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி வருவாய்த் துறையினர் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் நடைபெறக்கூடிய வேலைநிறுத்த போராட்டத்தில் 14,000 வருவாய்த்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மக்களவை தேர்தல் பணிகளை …

Modi: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாதப்பூரில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா மாநாடு இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து மாதப்பூரில், மாநாடு நடைபெறும் மைதானத்தில் இறுதிகட்ட பணிகள் …

பொதுவாக கிரகங்களில் ராகு கிரகம் கேடு ஏற்படுத்தும் கிரகமாக இருந்து வருகிறது. 18 மாதத்திற்கு ஒருமுறை இந்த ராகு கிரகம் இடப்பெயர்ச்சி செய்யும். கிரகங்களில் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக இடபெயர்ச்சி செய்யும் கிரகம் ராகு தான். இந்த இடப்பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுக்கும் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.  ராகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் …