ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி விற்பனை ; உரிமையாளர் கைது!

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டலில் ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது.அதன்பிறகு அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

அதனையடுத்து கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து காகித தட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Post

"தமிழ்நாட்டில் மோடியின் பருப்பு வேகாது.. அவருக்கு ரெட்டை நாக்கு!" - கடுமையாக விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ்!

Tue Apr 23 , 2024
ஒரு நாடு, ஒரு தர்மம், ஒரு மொழி என்று சொல்லும் மன்னருக்கு இரண்டு நாக்கு. இது நாம் எல்லாரும் தலை குனிய வேண்டிய அசிங்கமான விஷயம் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் குறித்த பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு […]

You May Like