அதிர்ச்சி..! இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 145 பெண்கள் மீது போதை ஊசி தாக்குதல்..!!

france people 1

பிரான்ஸில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற வருடாந்திர உலக இசை தினம் நிகழ்ச்சியில், 145 பேர் மீது போதை ஊசியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் டீன் ஏஜ் பெண்கள் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சந்தேக நபர்கள் வைத்திருந்த ஊசிகளில் ரோஹிப்னால் அல்லது GHB போன்ற பாலியல் வன்கொடுமை மருந்துகள் இருந்ததா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இவை ஒருவரை மயக்கமடையச் செய்து, தன்னையறியாமல் வன்முறைக்கு ஆளாக்கும் வகையில் பயன்படக்கூடியவை என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சனிக்கிழமை மாலை, இசை விழாவிற்காக மில்லியன் கணக்கானோர் வீதிகளில் திரண்டனர். பாரிஸில், இதுவரை இல்லாத அளவுக்கான கூட்டம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். விழாவின் போது மட்டும் 370 பேர் கைது செய்யப்பட்டனர், அதில் பாரிஸில் மட்டும் 90 பேர் உள்ளனர்.

மெட்ஸ் நகரில், ரூ டு பலாய்ஸ் பகுதியில் இரவு 9:15 மணிக்கு ஒரு பெண் மீது போதை ஊசி தாக்குதல் நடத்தப்பட்டது. சிசிடிவி காட்சிகள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு, மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது செல்போன் பரிசோதனையில் கூடுதல் தகவல்கள் கிடைக்கக்கூடும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், பாரிஸில் மூன்று நபர்கள் கத்தியால் குத்தப்பட்டனர். இதில் 15 வயது சிறுமி, 18 வயது இளைஞர் உள்ளிட்டவர்கள் அடங்குவர். 17 வயது இளைஞர் ஒருவரும் அடிவயிற்றின் கீழ் கத்திக்குத்து காயத்துடன் தெருவில் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதை ஊசி தாக்குதல் நடத்தப்படுவதாக எச்சரிக்கை விடப்பட்ட போதிலும், மக்கள் நிகழ்ச்சியை தவிர்க்கவில்லை. விழாவில் 13 சட்ட அமலாக்க அதிகாரிகளும் காயமடைந்தனர். இதுவரை 145 பேர் மீது போதை ஊசியால் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Read more: இந்த அறிகுறிகள் உடலில் தோன்றினால் கல்லீரலில் பிரச்சனை இருக்குமாம்..!! – எச்சரிக்கும் மருத்துவர்

Next Post

மத்திய இணையமைச்சர் ஆகிறாரா நடிகை மீனா ? விரைவில் மோடி, அமித்ஷா உடன் சந்திப்பு ?

Tue Jun 24 , 2025
துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கரை மீனா சந்தித்து பேசி உள்ள நிலையில், அவர் மத்திய இணையமைச்சர் ஆகப்போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மாறியவர் நடிகை மீனா. 45 ஆண்டுகளை கடந்தும் மீனா திரையுலகில் பயணித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே முன்னணி நடிகைகளில் ஒருவராக மீனா மாறினார். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, […]
newproject8 1750736417 1

You May Like