தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலர் பிரச்சாரம் செய்து வருவது வழக்கம்.
இந்த வகையில் சென்னையை சேர்ந்த ஜான் ரவி என்ற நபர் குஜராத்தில் தொழில் செய்து வருகின்றார் இவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உள்ளிட்டவரை அவதூறாக விமர்சனம் செய்து கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.
ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அரசு வழக்கறிஞர் ராஜசேகர் பந்தநல்லூர் காவல்துறையில் புகார் வழங்கினார் அதனை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஜான் ராவியை சென்னையில் கைது செய்து பந்தநல்லூருக்கு அழைத்து வந்தனர். திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் அவர் ஆஜர் படுத்தப்பட்டு அதன் பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.