புகைப்படம் எடுக்க நினைத்து உறைபனியால் உயிர் பரிபோன சம்பவம்..! 

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முத்தனா (49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அமெரிக்காவின் அரிசோனாவில் நாராயணா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.


கிறிஸ்துமஸ் விடுமுறையில் நாராயணா தனது மனைவி ஹரிதா மற்றும் இரண்டு மகள்களுடன் பயணம் செய்தார். மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் கோகோனியோ நகரில் உள்ள ஆற்றுக்கு சுற்றுலா சென்றனர்.

இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஆறு முழுவதும் உறைந்து காணப்பட்டது. 

குழந்தைகளை ஆற்றின் அருகே விட்டுவிட்டு, நாராயணா, ஹரிதா மற்றும் மற்றொரு இந்தியரான கோகுல், 3 பேர் உறைந்த நதியின் மீது நடந்தனர். 

உறைந்திருந்த ஆற்றின் மீது புகைப்படம் எடுக்கும் நோக்கில் மூவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​உறைந்திருந்த ஆறு திடீரென வெடிப்பு ஏற்பட்டதால் மூவரும் உறைந்திருந்த ஆற்றில் விழுந்தனர். 

பின்னர் அவர்கள் தண்ணீரில் மூழ்கி நிலையில் உறைந்த பனியால் உடனடியாக இறந்தனர். இதனை தொடர்ந்து, பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் , 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

1newsnationuser5

Next Post

பனியால் உறைந்த ஆற்றின் மீது நடந்துச் சென்ற 3 இந்தியர்கள் பலி..!! புகைப்பட மோகத்தால் அமெரிக்காவில் பறிபோன உயிர்..!!

Thu Dec 29 , 2022
அமெரிக்காவில் பனிப்பொழிவால் உறைந்த ஆற்றின் மீது புகைப்படம் எடுப்பதற்காக சென்ற இந்திய தம்பதி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயணா முட்டனா (49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நாராயணா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனாவில் வசித்து வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையொட்டி நாராயணா தனது மனைவி மற்றும் 2 மகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். […]
பனியால் உறைந்த ஆற்றின் மீது நடந்துச் சென்ற 3 இந்தியர்கள் பலி..!! புகைப்பட மோகத்தால் அமெரிக்காவில் பறிபோன உயிர்..!!

You May Like