ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முத்தனா (49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அமெரிக்காவின் அரிசோனாவில் நாராயணா குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கிறிஸ்துமஸ் விடுமுறையில் நாராயணா தனது மனைவி ஹரிதா மற்றும் இரண்டு மகள்களுடன் பயணம் செய்தார். மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் கோகோனியோ நகரில் உள்ள ஆற்றுக்கு சுற்றுலா சென்றனர்.
இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக ஆறு முழுவதும் உறைந்து காணப்பட்டது.
குழந்தைகளை ஆற்றின் அருகே விட்டுவிட்டு, நாராயணா, ஹரிதா மற்றும் மற்றொரு இந்தியரான கோகுல், 3 பேர் உறைந்த நதியின் மீது நடந்தனர்.
உறைந்திருந்த ஆற்றின் மீது புகைப்படம் எடுக்கும் நோக்கில் மூவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது, உறைந்திருந்த ஆறு திடீரென வெடிப்பு ஏற்பட்டதால் மூவரும் உறைந்திருந்த ஆற்றில் விழுந்தனர்.
பின்னர் அவர்கள் தண்ணீரில் மூழ்கி நிலையில் உறைந்த பனியால் உடனடியாக இறந்தனர். இதனை தொடர்ந்து, பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் , 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.