ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் பகுதி அருகே ரயில்வே தண்டவாளத்தில் 3 வயது பெண் குழந்தையின் சடலம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. விசாரணையில், உயிரிழந்த குழந்தையின் தாயார் சுனிதா தான் இந்த கொடூர கொலையை அரங்கேற்றியிருக்கிறார். சுனிதாவுக்கு திருமணமாகி 5 குழந்தைகள் இருந்த நிலையில், அவருக்கும் சன்னி மால்டா என்ற நபருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சுனிதா கடந்த சில மாதங்களாக கணவரை பிரிந்து சன்னியுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் குழந்தையை கொலை செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனர். அதன்படி, தன்னுடைய 3 வயது குழந்தை கிரணை வீட்டில் வைத்து கழுத்தை நெறித்து சுனிதாவும் அவரது கள்ளக்காதலன் சன்னியும் கொலை செய்துள்ளனர். பின்னர், குழந்தையின் சடலத்தை துணியால் சுற்றி, ஸ்ரீகங்காநகர் ரயில் நிலையத்திற்கு வந்து டெல்லி நோக்கி செல்லும் ரயிலில் ஏறியுள்ளனர்.
சிறிது தூரம் ரயில் சென்றதும் அப்பகுதியில் உள்ள லக்ஷ்மி நாராயண் என்ற கால்வாய் வந்துள்ளது. அதில், குழந்தையை தூக்கி வீசிவிடலாம் என்று திட்டமிட்டு வீசும் போது, சடலம் தவறி ரயில்வே பாதையிலேயே விழுந்து விட்டது. இதனால், ஜோடி இருவரும் கையும் களவுமாக காவல்துறையில் சிக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.