எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி..!! அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி..!!

கர்நாடகாவில் அதிமுகவை ரப்பர் ஸ்டாம்ப் கட்சியாகவே எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டி கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பிற மாநிலங்களில் ஏன் அதிமுகவை வளர்க்க வேண்டும் என மேலிடம் நினைப்பதாக கர்நாடகா நிர்வாகிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதை கூட கட்சி மேலிடம் கூற மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். ஜெயலலிதாவுக்கு பிறகு கர்நாடகாவில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை மதிப்பளிப்பதில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்டி குமார் ராஜினாமா செய்துள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், அதிருப்தியில் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More : BREAKING | தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி திரையரங்குகள் மூடல்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Chella

Next Post

Election: திருச்சியில் பரபரப்பு.!! அதிமுக நிர்வாகிகளுக்கு கத்தி குத்து..!! திமுக நிர்வாகிகள் அடாவடி.!!

Wed Apr 10 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வருட பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன் தங்களது கூட்டணியை […]

You May Like