’தீபாவளிக்கு சூப்பர் பரிசு’..!! ’2 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்’..!! வாகன ஓட்டிகளுக்கும் ஒரு குட்நியூஸ்..!!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பயனாளிகளுக்கு இரண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என குஜராத் அரசு அறிவித்துள்ளது.


குஜராத் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக அரசு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா இரண்டு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், சிஎன்ஜி மற்றும் பைப்டு நேச்சுரல் கேஸ் ஆகியவற்றின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரி அல்லது வாட் வரியை 10 சதவீதம் குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் சிஎன்ஜியை ஒரு கிலோவுக்கு ரூ.7 குறைய வாய்ப்புள்ளது. இதன்மூலம் 14 லட்சம் வாகன உரிமையாளர்கள் பயன்பெறுவர்.

’தீபாவளிக்கு சூப்பர் பரிசு’..!! ’2 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்’..!! வாகன ஓட்டிகளுக்கும் ஒரு குட்நியூஸ்..!!

மேலும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு இரண்டு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 38 லட்சம் பேர் பயனடைவார்கள். இது குஜராத் மக்களுக்கான தீபாவளி பரிசு என மாநில கல்வி அமைச்சரும், குஜராத் அரசின் செய்தித் தொடர்பாளருமான ஜிது வகானி தெரிவித்துள்ளார்.

CHELLA

Next Post

’25% தள்ளுபடியில் சிவகாசி பட்டாசு’..!! 'இந்த தேதிக்குள் வாங்கினால் மட்டும்'..!! சரவெடி அறிவிப்பு

Tue Oct 18 , 2022
சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 21ஆம் தேதிக்குள் முன்கூட்டியே வந்து பட்டாசு வாங்குபவர்களுக்கு 25% தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், அனைத்து பகுதிகளிலும் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தற்காலிக சிறப்பு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் சிவகாசியை சேர்ந்த சில முன்னணி நிறுவனங்கள் தற்காலிக சிறப்பு கடைகளை வைத்து மக்களுக்கு […]
’25% தள்ளுபடியில் சிவகாசி பட்டாசு’..!! இந்த தேதிக்குள் வாங்கினால் மட்டும்..!! சரவெடி அறிவிப்பு

You May Like