பூந்தமல்லியில் தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு சென்ற நிர்வாகி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகரும், தவெக தலைவருமான விஜயின் 51-வது பிறந்தநாளை அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் வெகு சிறப்பாக கொண்டாடினர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தவெக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் ரத்த தானம் வழங்குதல், சிறப்பு பிரார்த்தனைகளை செய்தல், மக்களுக்கு உணவு மற்றும் உடை வழங்குதல் உள்ளிட்ட […]
Accident
சென்னை அனகாபுத்தூர் அருகே தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் நடைபெற்ற மோசமான வாகன விபத்தில் கர்ப்பிணியான இளம் பெண் மற்றும் அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அனகாபுத்தூர் அருகே மதுரவாயல் பை-பாஸ் சாலையில் மணிகண்டன் என்ற நபர் காரை எதிர்திசையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது மணிகண்டன் ஓட்டி வந்த கார், எதிரில் வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் […]
தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சென்ற கார் விபத்துக்கு உள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பணியாற்றி வந்த பூரண ஜெய ஆனந்த் திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் காரில் சென்றுள்ளார். அவருடன் தனி பாதுகாவலர் நவீன்குமார், வழக்கறிஞர் எஸ்.தன ஜெயராமச்சந்திரன் (வயது 56), நீதிமன்றப் பணியாளர் ஸ்ரீதர் குமார் (வயது 37), நீதிமன்ற உதவியாளர் உதயசூரியன், […]
ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் உயர்மட்டப்பாதை பணியின்போது, இணைப்பு பாலம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விரைவில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று சென்னை மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மணப்பாக்கத்தில் உள்ள எல் அண்ட் டி தலைமை அலுவலக பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு வாரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட இரண்டு தூண்கள், […]
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் வாசலில் தூங்கிக் கொண்டிருந்த பக்தர் மீது கார் ஏறி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக கார் வாங்கிய நபர் பூஜைக்காக சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு சென்றிருந்தார். அந்த காரை முன்னே நகர்த்தியபோது கட்டுப்பாட்டை மீறி வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கோயில் வாசலில் தூங்கி கொண்டிருந்த நபர் மீது கார் ஏறி இறங்கியது. பக்தரின் தலையில் கார் ஏறியதில் தலை நசுங்கி […]
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின்போது ஷாருக்கான் விபத்தில் சிக்கியதாகவும் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தனியார் ஊடகம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில் ஷாருக்கானுக்கு படப்பின்போது ஏற்பட்ட விபத்தில் அடிபட்டு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியதாகவும், உடனடியாக அவர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷாருக்கானுக்கு மூக்கில் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததோடு நிதி உதவியையும் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல் நிலைய சரகம் மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் இன்று காலை பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு சென்ற தனியார் பேருந்து வலதுபுர முன் டயர் எதிர்பாராத விதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்து கொண்டு இருந்த […]
சாலைப்பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கு இலக்காகும் இடங்களை கண்டறிந்து, குறுகிய கால நடவடிக்கைகளை செயல்படுத்தி அவற்றைக் குறைப்பதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் கீழ் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர்களுக்கு, விபத்துக்கு உள்ளாகும் இடங்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் விபத்து நடக்காமல் தடுக்கும்வகையில் தலா ரூ.10 லட்சம் செலவில் நடவடிக்கைகளை எடுக்க இந்த இயக்குநர்கள் […]
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டு நேர்ந்த கோர விபத்தில், 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நடந்த இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்தாக கருதப்படும் இந்த நிகழ்வு குறித்து, 4 பேர் கொண்ட ரயில்வே அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. வழக்கமாக ரயில்கள் பயணம் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் முதன்மையான பாதைகள் மெயின் லைன் என அழைக்கப்படுகிறது. அதே நேரம், அதிகப்படியான ரயில்களை […]
கோரமண்டல் ரயிலின் எஞ்சின் மற்றும் 11 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாஹனாகநகர் அருகே விபத்துக்குள்ளானதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கோரமண்டல் ரயிலின் எஞ்சின் மற்றும் 11 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரயிலின் […]