தனது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது இபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. மேலும் “ அன்று ஒரு நிலை, இன்று ஒரு நிலை என இபிஎஸ் இருப்பது வேதனை அளிக்கிறது.. ஆட்சியை நடத்த தடுமாறிய போது ஓ. பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தவர் இபிஎஸ் தான்..” என்று தெரிவித்தார்.. பதவி தருவதாக ஓபிஎஸ்-ஐ அழைத்து வந்து பேசிய இபிஎஸ் பிறகு கைவிட்டார்.. […]

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கப்போவதாக கூறிய செங்கோட்டையன், கடந்த வாரம் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.. இதை தொடர்ந்து இன்று செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.. இந்த நிலையில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது இபிஎஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.. அப்போது பேசிய அவர் “ […]

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ எடப்பாடி அடாவடி செயல்பாடுகளால் அதிமுக மூத்த தலைவர்கள் திமுகவுக்கு செல்வது துரதிர்ஷ்டவசமானது. பழனிசாமியை வீழ்த்தவே அவர்கள் திமுகவில் இணைந்துள்ளனர் என்று நான் கருதுகிறேன்.. எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தும் அளவுக்கு நாங்கள் பெரிய கட்சி இல்லை.. நாங்கள் வளர்ந்து வருகிறோம்.. அதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.. தேர்தல் கூட்டணி தொடர்பாக பல கட்சிகளை சேர்ந்தவர்கள் […]

அதிமுகவில் இருந்து என்னிடம் உறுதியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடு விதித்தார். இதனால் அதிருப்தியடைந்த பழனிசாமி, செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகளை பறித்தார். இந்த நிலையில், தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக மதுரை சென்ற செங்கோட்டையன், தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த […]

அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கப்போவதாக கூறிய செங்கோட்டையன், கடந்த வாரம் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியதை வழக்கு தொடரப்படும் என்று கூறியிருந்தார்.. மேலும் இபிஎஸ் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் மட்டுமே என்றும் தெரிவித்திருந்தார்.. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் […]

அனைத்துக் கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் நாடகம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மக்கள் குறைகளைத் தீர்க்க ஒருபோதும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாத முதல்வர் ஸ்டாலின், தற்போது மட்டும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் பற்றிய கூட்டத்தை நடத்துவதில் இருந்தே தெரிகிறது இது மக்களை மடைமாற்ற நடத்தப்படும் மற்றுமொரு திசைதிருப்பு நாடகம். பல்லாண்டுகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் வாக்காளர் […]

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை மாவட்ட பொறுப்பாளர்கள் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வதற்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, இது […]

பாஜகவுடன் கூட்டணி வைத்த நாள் முதல் அதிமுகவுக்கு இறங்குமுகம் தான் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; வாக்காளர் பட்டியலில் சரி பார்ப்பது தவறில்லை. கடந்த தேர்தலில் வாக்களித்தவர்களை நீக்க வேண்டும். எந்த விசாரணையும் இன்றி சிலரை சேர்க்க வேண்டும் என்ற குற்றச்சாட்டும் வருகிறது. யார் பெயரை நீக்கினாலும் அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு வேலைக்கு என […]