தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வழங்கிய ஒரு பேட்டி அதிமுக வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்பை கிளப்பி இருக்கிறது. அந்த பேட்டியில் அண்ணாமலை தெரிவித்ததாவது தமிழகத்தில் பல்வேறு ஆட்சிகள் ஊழல் நிறைந்தவையாக இருந்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் தான் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது நாட்டில் ஊழல் மிகுந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு முதல் இடம் என்று கூட சொல்லலாம் என அவர் கூறினார். […]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச எந்த தராதரமும் யோக்கிதையும் அண்ணாமலைக்கு இல்லை என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த செய்தியாளர் சந்திப்பில், ”ஊழலைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது கவுன்சிலராகவோ இல்லாத அண்ணாமலை மீது அவரது சொந்த கட்சிக்காரர்களே ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமுதாயத்தில் சாராயம் விற்பவர்கள், […]

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; அகில உலகத் தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா பற்றியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியைப் பற்றியும் தரக்குறைவாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது […]

பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை மாநில உடற்கல்வி முதன்மை ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சமிபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை; டெல்லியில்‌ நடைபெற இருக்கும்‌ பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டிகளில்‌ கலந்துகொள்ள தமிழ்நாடு சார்பாக அணியை தேர்வு செய்யாமல்‌, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மாணவர்களை புறக்கணித்தது குறித்து, கேள்வி எழுப்பியிருந்தார். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் மாணவர்கள் கலந்து கொள்வதற்குரிய தகவலை சரியாக தெரிவிக்காத தமிழ்நாடு முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணணை பள்ளிக்கல்வித்துறை […]

ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியது தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; ஆவின் நிறுவனத்தில், சிறார்களை பணியமர்த்தியதாக செய்திகள் வெளியானதும், ஆரம்பம் முதல் அதனை மழுப்பி மறைக்கும் முயற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர். அரசு நிறுவனத்தில் சிறார்களை பணியமர்த்தி, அதற்கான ஊதியத்தையும் வழங்காமல், போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் […]

அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு வழங்க இயலாத கையாலாகாத அரசாக திமுக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில்; திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நரசிங்கபுரம் ஊராட்சியில் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செம்மண் அள்ளிய திமுகவினரைத் தடுத்த துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரனை, நரசிங்கபுரம் ஊராட்சி மன்ற தி.மு.க தலைவர் மகேஸ்வரன் மற்றும் அவரின் கூட்டாளிகளான […]

கள்ளச்சாராயம்‌ விவகாரம் தொடர்பாக தமிழ் முழுவதும் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. விழுப்புரம்‌ மாவட்டம் மரக்காணம்‌ அருகே கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ இதுவரை 22 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. மேலும்‌, 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு 10 லட்சம்‌ ரூபாய்‌, சிகிச்சை பெற்று வரும் குடும்பங்களுக்கு […]

கடந்த 2️ வாரங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் ஒரு ஆடியோ வெளியானது. ஆனாலும் அது போலியானது என்று டிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்து இருந்தார். இத்தகைய சூழலில், அவர் தொடர்பாக மற்றொரு ஆடியோவை தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இது தொடர்பாக ட்விட்டரில் விளக்கம் அளித்த பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் இருப்பதைப் போல தான் யாரிடமும் பேசவில்லை என்று கூறி இருந்தார். இந்த நிலையில் தான் தமிழக […]

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமோகா நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கடந்த வியாழக்கிழமை தமிழ் வாக்காளர் மாநாடு நடந்தது. தமிழ் வாக்காளர்களின் ஆதரவை ஒன்று திரட்டும் நோக்கத்துடன் அந்த மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது சற்றென்று மேடையில் இருந்த முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா எழுந்து தமிழ் தாய் வாழ்த்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். அதன் பிறகு அவர் வற்புறுத்தியதால் கன்னட தாய் […]

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் சிவமோகா தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சியின் இணை பொறுப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக தமிழ் தாய் வாழ்த்து ஒலித்தது. அப்போது திடீரென்று குறுக்கிட்ட கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை நிறுத்துமாறு அறிவுறுத்தினார், இதனால் திடீரென்று மேடை அமைதியானது. […]