தமிழக பா.ஜ.க.வில் களை எடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளதாக கூறி உள்ள அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இது ஆரம்பம்தான் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’’ பா.ஜ.க.வின் லட்சுமண ரேகையை மீறினால் நடவடிக்கை உறுதி.. யாரையும் விடப்போவதில்லை. கட்சியில் களை எடுக்கும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. தற்போது ஆரம்பக்கட்டம்தான். வரும் காலத்தில் இன்னும் பயங்கரமாக இருக்கும். இன்னும் அதிரடி நடவடிக்கைகள் […]
annamalai
கேபிள் தொழிலை தனது ஏகபோக உரிமையாக தி.மு.க-வின் குடும்ப நிறுவனம் சுமங்கலி கேபிள் விஷன் மாற்றியதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டது அறிக்கை; தொடர்ந்து ஏழை எளிய பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலேயே இந்த திறனற்ற தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. சுமார் இருபது லட்சத்துக்கும் அதிகமான, எளிய பொதுமக்களை வாடிக்கையாளர்களாக கொண்ட அரசு கேபிள் நிறுவனத்தின் ஒளிபரப்பில், கடந்த இரண்டு நாள்களாக […]
பா.ஜ.க.விலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 8 ஆண்டுகளாக கடன் வாங்கில பலருக்கு உதவி செய்திருக்கின்றேன் பா.ஜ.க.வுக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறியது வருத்தம் அளிக்கின்றத. புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க நேரம் அளிக்காமல் நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். என்னிடம் விசாரணை நடத்தாமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சி பொறுப்புகளில் […]
தமிழக பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல் வெடித்து வரும் நிலையில் காயத்ரி ரகுராமின் பதிவுகள் சூடுபிடிக்கத் தொடங்கிஉள்ளது. மேலும் கட்சி நிர்வாகிகளை கண்டிக்கின்றேன் என்ற பெயரில், காயத்ரி ரகுராம் பல விஷயங்களை உளறியுள்ளார். பா.ஜ.க.வில் உள்கட்சி மோதல் வெடித்துள்ளதால் டுவிட்டரில் பல தகவல்களை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வில் மூத்த நிர்வாகிகளை ஓரம் கட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மூத்த நிர்வாகிகளை அவமதிப்பதாகவும் புகார் கூறியுள்ளார். கட்சியில் இத்தனை வருடமாக ஒரு பெண்ணாக இருந்தும் […]
தமிழகத்தில் ஆளும் கட்சியை விமர்சித்து வரும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தற்போது புதிய பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், ’’ திமுகவில் தான் தனிப்பட்ட முறையில் அண்ணாமலையை அதிக அளவில் விமர்சித்து வருகின்றார்கள். அநாகரீகமாக பேசி வன்மத்தை கக்குவது அவர்கள்தான். அநாகரீகமாக பேசுவதற்காகவே திமுக அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், சமூக ஊடக பிரிவினர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். ஆனால், நான் தமிழக அரசை தனி மனிதனாக இருந்து எதிர்க்கின்றேன். திமுக ஆட்சிக்கு […]
இலங்கையில் இருந்து வந்த தமிழ் குடும்பங்களை அகதிகளாக முகாமில் வைக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து 20-ம் தேதி கூடலூரில் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ’’இலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்திய தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் 15,000 பேர் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்கள். இவர்கள் […]
தமிழக முழுவதும் பாஜக சார்பில் இன்று 1100 ஒன்றியங்களில் போராட்டம் நடைபெற உள்ளது. ஆவின் பால் ஆரஞ்சு நிற பாக்கெட் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தியது மற்றும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன் படி இன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. போராட்டத்தில் மக்களும் கலந்து கொள்ளும் வகையில் நடத்த பாஜக […]
நேற்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தபோது ஒரு மணி நேரம் என்ன பேசினோம் என்பதை பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு அளித்தனர். மாநிலத் தலைவர் என்ற முறையில் காரில் பயணித்த அண்ணாமலை தன்னுடன் மோடி என்ன பேசினார் என்பதை பகிர்ந்துகொண்டுள்ளார். மாநிலத் தலைவர் என்ற முறையில் என்னை வாகனத்தில் […]
தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை கார் வெடிப்பு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காவல்துறை மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் என்று தமிழ்நாடு போலீஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில்; தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த […]
தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்பொழுது இந்த ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறுமா என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. தமிழகத்தின் மொழி, கல்வி உரிமையை பறிக்கும் அரசாக பாஜக இருக்கிறது. எந்த […]