எம்.எஸ்.ஷா., பாஜக பொருளாதார பிரிவு மாநில தலைவராக இருந்து வரும் இவர், மதுரை திருமங்கலத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் தலைவராக உள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, 15 வயது சிறுமியின் தந்தை ஒருவர், எம்.எஸ்.ஷா மீது மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் …
BJP
மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகே போராட்டம் நிறுத்தப்படும் என டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டோம் என தமிழக அரசு …
தேமுதிக, அதிமுகவை தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலை பாஜக புறக்கணிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா கடந்த 2021ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர் திடீரென உயிரிழந்ததை அடுத்து 2023ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், அவருடைய தந்தையும், காங்கிரஸ் மூத்த நிர்வகியுமான …
தமிழக சுகாதாரத் துறையில் குறைந்தது வாரம் ஒரு உயிரைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மின்சாரம் தாக்கி, சிகிச்சைக்காக வந்த பாண்டித்துரை என்பவர் மருத்துவர் இல்லாததால் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு …
பழநியில் தனியார் மதுபாரில் கட்சியினருடன் புகுந்து ரகளையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் கனகராஜை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து மதுரையில் பாஜ மகளிரணி சார்பில் கடந்த 3ம் தேதி பேரணி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதில் கலந்துகொள்ள பழநியில் இருந்து புறப்பட்ட …
தமிழக பாஜகவுக்கு 15-ம் தேதிக்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக-வுக்கு புதிய மாநிலத் தலைவர் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேசிய தலைமை, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நியமனம் செய்துள்ளது. கிஷன் ரெட்டி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக பொறுப்பாளராக இருந்தார். …
துரைமுருகன், கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் விமானம் மூலம் டெல்லிக்கு சென்றுள்ளனர். துரைமுருகன், கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். …
அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில் நேற்று மதுரையில் பேரணி நடத்திய குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்து ஆட்டு மந்தையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவியின் …
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணமாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை தமிழகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 2025-ம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் …
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் முழு உண்மையை வெளிக்கொணர வலியுறுத்தி பாஜக சார்பில் மதுரையில் இருந்து சென்னை வரை இன்று நடைபெறும் நீதிகேட்பு பேரணியில், பாஜக மகளிரணி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் …