fbpx

காவல் துறையின் அமைச்சராக விளங்கக்கூடிய தமிழக முதல்வர் ஸ்டாலின், காவல் துறையில் போதிய கவனம் செலுத்த முடியாத சூழ்நிலையில் இருப்பதால் உடனடியாக காவல்துறைக்கு தனி அமைச்சரை உருவாக்க வேண்டும் என பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் ஸ்டாலின், காவல் துறையினர் கண்ணியத்துடன், சட்டத்துக்கு உட்பட்டு …

திமுகவை ஆட்சியை விட்டு அகற்றும் வரை காலணி அணிய மாட்டேன் என அண்ணாமலை கூறுவது உண்மையென்றால், அவர் வாழ்நாள் முழுவதும் காலணி அணிய போவதில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சாட்டையில் அடிப்பது என்பது தண்டனை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொள்கிறார் என்றால், …

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் டிசம்பர் 23ம் தேதி, தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒருவர் ஆண் நண்பரை விரட்டி விட்டு, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை செல்போனில் எடுத்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதையடுத்து, இவ்விவகாரம் தொடர்பாக …

2023-24 நிதியாண்டில், தனிநபர்கள், அறக்கட்டளைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து, மொத்தம் ரூ.2,244 கோடியை பாஜக நன்கொடைய வசூலித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, 2023-24ல் இதே வழியில் காங்கிரஸ் ரூ. 288.9 கோடியைப் பெற்றது என்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தரவுகள் தெரிவிக்கின்றன. முந்தைய ஆண்டு ரூ.79.9 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2023-24 ஆம் ஆண்டிற்கான இரு கட்சிகளின் …

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி பாலியல் வழக்கில் கைதானவார்த்த திமுகவைச் சேர்ந்தவர் என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23.12.2024 -ந் தேதி இரவு சுமார் 08.00 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் …

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்து மாணவனை தாக்கியுள்ளனர். மாணவனை அடித்து துரத்திவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

மாணவன் அளித்த …

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை மறுநாள் தமிழகம் வர உள்ளார். நாளை மறுநாள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை செல்கிறார். அங்கு மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்கிறார். மேலும் கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட அலுவலகங்களையும் …

எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய காவல்துறையில் பாஜக புகார் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 17-ம் தேதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு கட்சி தலைவர்களும் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், …

அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது சர்ச்சையாகியுள்ள நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது.

இந்த நிலையில், பி.ஆர்.அம்பேத்கர் குறித்து அமித் ஷா கூறிய கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மாபெரும் போராட்டத்தில் …

நேற்று மக்கள் அவையில் அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டை குறிக்கும் விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக மாநிலங்கள் அவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,” பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள்.

கடவுளின் பெயரை பலமுறை சொன்னால் …