பீகார் முன்னாள் முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருடன், விஐபி தலைவர் முகேஷ் சஹானி துணை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாட்னாவில் நடந்த இந்தியா கூட்டணியின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது, ​​மூத்த காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் இந்த முடிவை வெளியிட்டார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், ஆளும் NDA மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினார்.. […]

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து நின்றாலும் 23% வாக்குகளை கைப்பற்றும் என திமுக நடத்திய ரகசிய சர்வேயில் தெரியவந்துள்ளது. 2026-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அனைவரும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கும் தேர்தலாக மாறியுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணி வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு அதிகம் என்றாலும், புதிய தலைமைகள் மற்றும் இளைய தலைமுறை வருகையால் தேர்தல் கணிக்க முடியாத போட்டியாக மாறலாம். திமுக தலைமையிலான […]

கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. இந்த தீர்ப்புக்கு தவெகவினர், அதிமுகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.. அந்த வகையில் பாஜக இந்த தீர்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 பேரைக் காவு வாங்கிய […]

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலகர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அனைத்து வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் துணை அதைகாரிகளுக்கு இம்மாதம் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆன்லைன் மதிப்பீடு, வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தல் உள்ளிட்ட பயிற்சியை தேர்தல் ஆணையம் நடத்தியது.இந்த பயிற்சியில் 243 வாக்குச்சாவடி அதிகாரிகள் 1418 துணை […]

இறந்தவர்களை வைத்து தமிழக வெற்றிக் கழகம் அற்ப அரசியல் செய்கிறது, அதற்கு அதிமுகவும் பாஜகவும் துணை நிற்பதாகவும் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டயுள்ளார். இது தொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் துயர சம்பவம் நடந்தவுடனே எந்தவித அரசியலுக்கும் இடம் கொடுக்காமல் பாதிக்கப்பட்ட மக்களுடன் உறுதுணையாக இருந்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டதோடு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் […]

ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றமும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள். 1) திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு […]

ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில்; தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் இல்லை, முறையான லேப் வசதிகளும் மருந்துகளும் கிடைப்பதில்லை, சிறு மழை பெய்தாலும் மேற்கூரை ஒழுகுகிறது நோயாளிகளை வெள்ளம் சூழ்கிறது, […]

டாஸ்மாக் மூலம் நான்கு ஆண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறார்கள் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று திருச்செங்கோட்டில் பேசிய அவர்; கரூரில் அண்மையில் நடந்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். வேண்டுமென்றே திட்டமிட்டு அந்தக் கூட்டம் சரியான முறையில் நடைபெறக் கூடாது என்பதற்காக பிரச்சினை உருவாக்கப்பட்டதாக […]