வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் தென்மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு கேரளாவில் முன்னதாகவே பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. 8 நாட்களுக்கு முன்பே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த […]

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைய கூடும். மேலும், தென்னிந்தியப் பகுதிகளின் மேல் […]

சென்னை மாவட்டத்தில் இருக்கின்ற சிட்லபாக்கம் கல்யாணசுந்தரம் தெருவில் பொன்னுதாஸ்(48) என்பவர் வசித்து வருகிறார் இவர் திருமுடிவாக்கம் பகுதியில் ஆட்டோமொபைல் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவருடைய மனைவி ஜான்சி ராணி (45) என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினருக்கு அபினேஷ் (18) என்ற மகனும், அனுசம்பிகா (13) என்ற மகளும் உள்ளனர் இதில் அபினேஷ் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல […]

சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பள்ளியின் தாளாளராக தன்னுடைய உறவினரின் வீட்டிற்கு அந்த மாணவி அடிக்கடி சென்று வருவது வழக்கம். கடந்த 2017 ஆம் வருடம் மார்ச் மாதம் 29ஆம் தேதி அந்த மாணவிக்கு பள்ளி தாளாளர் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அந்த மாணவியை மிரட்டி […]

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சையத் சிக்கந்தர் (38). இவர் திருமங்கலம் பாடி குப்பம் காந்தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார்.மந்திரிப்பது, மாந்திரீகம் செய்வது போன்ற தொழிலை இவர் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர் வீட்டில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்து கொண்ட திருமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து. அவரது உடலை நீட்டு உபயோக […]

சென்னை திருவல்லிக்கேணி அப்பாவு தெருவை சேர்ந்தவர் ராசு இவர் தள்ளு வண்டியில் இஸ்திரி பெட்டியை வைத்து துணிகளை அயர்னிங் செய்து கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறார். இவர் கடந்த 6ஆம் தேதி இரவு தள்ளு வண்டியை திருவல்லிக்கேணி அப்பாவை தெருவில் சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அதற்கு அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது தள்ளுவண்டியில் இருந்த இஸ்திரி பெட்டி மற்றும் பணம் உள்ளிட்டவை காணாமல் போயிருந்தது தெரிய வந்தது. இது […]

தன்னாட்சி கல்லூரி அங்கீகாரம் பெறுவதற்கான புதிய வழிமுறைகளை கழகம் வெளியிட்டுள்ளது. தன்னாட்சியை பெற கல்லூரிகள்‌ தொடர்ந்து 10 ஆண்டுகள்‌ செயல்பட்டு இருக்க வேண்டும்‌. முந்தைய 5 ஆண்டுகளில்‌, முதலாம் ஆண்டு இளங்கலை படிப்பில்‌ 60 சதவீத மாணவர்‌ சேர்க்கை இருக்க வேண்டும்‌ என்ற விதிமாற்றப்பட்டு, தற்பொழுது 70 சதவீத மாணவர்‌ சேர்க்கை இருப்பது கட்டாயம். கல்வி நிறுவனத்தின்‌ h-index குறியீடு 10-ல்‌ இருந்து 20ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முந்தைய 3 ஆண்டு […]

சென்னை வேளச்சேரி சசிநகர் பகுதியில் இருக்கின்ற ஏரியில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்து இருக்கின்றனர். இதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்கு […]

தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் எப்போதும் போக்குவரத்தில் நெரிசல் அதிகமாக காணப்படும் அதன் காரணமாக, தலைநகர் சென்னையில் எண்ணில் அடங்காத விதத்தில் மேம்பாலங்கள் கட்டப்பட்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனாலும் எவ்வளவு மேம்பாலங்கள் கட்டினாலும் கூட இன்றளவும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறைந்த பாடு இல்லை. ஆகவே அவ்வப்போது காவல்துறை போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் மெட்ரோ உள்ளிட்ட பல முக்கிய பணிகள் நடைபெறும் சமயத்தில் […]