டெல்லியின் ஐ.பி. எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசித்து வருபவர் அசோக் சிங் (64) இவர் இன்ஜினியர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர். கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு மனைவியும் ஆதித்யாசிங்(23) என்ற மகனும் இருக்கின்றனர் இவரது மகன் ஆதித்யா குரு கிராம் பகுதியில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தந்தை அசோக் சிங் சமீபத்தில் குருகிராம் […]
Delhi
தேசிய தலைநகர் பிராந்தியத்தில், டீசல் ஜெனரேட்டர்களால் ஏற்படும் காற்று மாசை, சிறப்பாகத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்து விரிவான ஆய்வை காற்றுத் தர மேலாண்மைக்கான ஆணையம் மேற்கொண்டுள்ளது. தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள், அலுவலகப் பகுதிகள் உட்பட அனைத்துப் பிரிவிலும் பயன்படுத்தப்படும் டீசல் ஜெனரேட்டர் இயக்கத்தை முறைப்படுத்த இந்த ஆணையம், மாற்றியமைக்கப்பட்ட அட்டவணையை பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த அட்டவணை 01.10.2023 முதல் கடுமையாக பின்பற்றப்படும். இதில் கூறப்பட்டுள்ள […]
மும்பையில் 32 வயது பெண்ணை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லியை அதிர வைத்த ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கைப் போன்ற மற்றொரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மும்பையின் புறநகர்ப் பகுதியில் உள்ள மீரா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 32 வயது பெண்ணின் சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த பெண்ணை அவரது லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நபர் கொலை செய்ததாகக் […]
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்கிழமை புதிய சைபர் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனையில் நிர்வாகம் சார்பில், சைபர் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த, சைபர் தாக்குதல் செயல்பாட்டிலிருந்து தங்கள் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. ஏற்கனவே நவம்பர் 2022 இல் ஒரு சைபர் தாக்குதலால் எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் சேவைகள் சீர்குலைந்தது. ஒரு வருடத்திற்குப் பிறகு தற்போது […]
இன்றைய தினம் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா சர்வ மத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமானது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி மதியம் 12:00 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதத்தில், அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு […]
உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிட்ஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீரர்கள் ஒரு மாத காலமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக இவருக்கு எதிராக புகார்கள் குவிந்து வருகின்றன. இந்தப் புகார்கள் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பூஷன் சிங் மீது வழக்கப்பதிவு செய்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு […]
இன்று காலை 7:15 மணியளவில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு பிரதமர் நரேந்திரமோடியும், மக்களவை சபாநாயகரும் தலைமையேற்று நடத்தினார்கள். நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கின்ற காந்தி சிலை அருகே பந்தல் அமைக்கப்பட்டு ஆரம்பமானது. அதேபோல காலை 7.30 மணி அளவில் யாகம் வளர்க்கப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பூஜைகள் நடைபெற்றனர். அதில் பிரதமர் நரேந்திர மோடி, ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் […]
தலைநகர் டெல்லியில் சுமார் 96 வருடங்கள் பழமையான நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் போதுமான இடவசதி இல்லாததன் காரணமாக, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து அதன் அடிப்படையில், சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் வருடம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இத்தகைய நிலையில், சுமார் 970 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதியுடன் கூடிய […]
டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தனர். வாகன போக்குவரத்து வழக்கத்தை விடவும் மெதுவாகவே காணப்பட்டது. விமான சேவை போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது. மோசமான வானிலையின் காரணமாக, விமானங்கள் சரியான நேரத்தில் புறப்படுவதில் சிரமம் ஏற்பட்டது. பயணிகள் முன்பதிவு செய்து இருக்கின்ற விமானங்களுக்கான பயண நேரம் […]
டெல்லியை சேர்ந்த பெண் மருத்துவரான பூனம் ராஜ்புத் என்பவர் டெல்லி காவல் துறையில் ஒரு புகார் மனுவை வழங்கினார். அதில் தன்னிடம் 4.5 கோடி ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக காவல்துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, குற்றவாளிகள் அந்த பெண் மருத்துவரிடம் ஸ்பைக் கால் மூலமாகவே பேசி இருக்கிறார்கள் அதன் மூலமாகத்தான் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள் […]