டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில் 180 பயணிகள் இருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியா தனது விளக்க குறிப்பில், புனே-டெல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் AI858 விமானத்தின் கண்ணாடியில் சிறிய விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாக தரையிறங்கியதாக தெரிவித்துள்ளது. நேற்று மாலை 5.44 […]

டெல்லி குர்கானில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது இளைஞர் மேட்ரிமோனி மூலமாக இளம் பெண்களிடம் பழகி அவர்களிடம் தன்னை பணக்காரரை போல காட்டிக் கொண்டு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பின்பு அவர்களை ஏமாற்றியுள்ளார். இது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் விஷால் தலைநகர் டெல்லியில் எம்பிஏ முடித்தவர் இவர் மேட்ரிமோனி தளத்தில் தன்னை பணக்காரரை […]

தலைநகர் டெல்லியில் 200 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா நிலைமையை அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருகிறது. மேலும் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி மர்லேனா தெரிவித்துள்ளார். சுகாதாரத் துறையால் பகிரப்பட்ட தரவுகளின்படி, டெல்லியின் ஒரு நாள் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை […]

டெல்லியை சார்ந்த வயதான தம்பதி இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர்களது மருமகளும் அவரது பாய் ஃபிரண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கிழக்கு டெல்லியின் கோகுல்புர் பகுதியைச் சார்ந்தவர் ராதே ஷியாம் மற்றும் அவரது மனைவி வீணா ஆகியோர் திங்கள் கிழமை காலை கழுத்து அறுக்கப்பட்டு தங்களது படுக்கை அறையில் பிணமாக கடந்துள்ளனர். மேலும் அவர்களது வீட்டிலிருந்து நகை மற்றும் 4.5 லட்சம் காணாமல் போய் […]

வடக்கு டெல்லி புறநகர் பகுதியில் பாடல் சத்தத்தை குறைக்க கூறிய கர்ப்பிணி பெண் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டின் காரணமாக, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதாவது சிர்சாபூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சு முப்பது இவர் வசிக்கும் வீட்டின் மாடியில் கடந்த வாரம் சிலர் அதிக சத்தத்துடன் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் ரஞ்சுவுக்கு தூக்கம் வரவில்லை. அதன் காரணமாக, மாடிக்கு சென்ற அவர் பாடல் […]

டெல்லியில் கொரோனா வழக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு நேற்று 535 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 25.98 சதவீதமாக உயர்ந்தது. சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.. நாட்டில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு மத்தியில், டெல்லியில் கடந்த சில நாட்களாக புதிய கொரோனா வழக்குகளின் […]

காவி கொடியை கலங்கப்படுத்தியதாக டெல்லியைச் சார்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் சாஸ்திரி நகர் பகுதியில் ராம் நவமி பண்டிகையை ஒட்டி அலங்காரத்திற்காக கட்டப்பட்டிருந்த காவி கொடிகளை மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்று போய் அவற்றைக் கிழித்து கால்வாயில் வீசி எறிவது போன்ற காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தன. இச்சம்பவம் தொடர்பாக சாகர் என்பவர் செவ்வாய்க்கிழமை மாலை […]

டெல்லி மெட்ரோவில் பிகினி உடை அணிந்து பயணம் செய்த ஒரு பெண்ணால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமீப காலமாகவே டெல்லி மெட்ரோ ரயிலில் அடிக்கடி பயணம் செய்யும் நபர்களால் மெட்ரோ பெண் என அழைக்கப்படும் இந்த நபர் சர்ச்சைக்குரிய வகையில் அரைகுறை ஆடைகளுடன் தொடர்ச்சியாக பயணம் செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து அந்த பெண்ணை சமூக […]

மதுபான ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவலை ஏப்ரல் 17-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி மாநில அரசு, மதுபானக் கொள்கையில் சில திருத்தங்களை கொண்டு வந்தது. அதன் அடிப்படையில், சுமார் 800 நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் […]

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. எனவே காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால், சுய சிகிச்சைக்கு பதிலாக மருத்துவ உதவியை நாடுவது முக்கியம், சரியான நேரத்தில் சரியான சிகிச்சை எடுக்கப்படாவிட்டால் நிலைமை மோசமாகலாம்.. இந்நிலையில் H3N2 வைரஸ், நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக […]