இந்தியாவில் பல முக்கிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் இந்தியக் கிளையின் முன்னாள் தலைவரான சாகிப் நாச்சன், டெல்லி திகார் மத்திய சிறையில் உயிரிழந்துள்ளார். சிறையில் இருந்தபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட அவருக்கு, மருத்துவ பரிசோதனையில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. உடனடியாக சாஃப்தார்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாத பாதையில் சென்ற பிசினஸ்மேன்: மகாராஷ்டிரா […]

மக்களவை எதிர்கட்சி தலைவருக்காக அரசு ஒதுக்கிய பங்களாவுக்கு மாற ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினராக 2004ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் டெல்லி துக்லக் லேன் சாலையில் உள்ள பங்களா வீட்டில் வசித்து வந்தவர் ராகுல் காந்தி. 2023 ஆம் ஆண்டு அவதூறு வழக்கில் பதவியை இழந்த ராகுல்காந்தி பங்களாவை காலி செய்து விட்டு தாயார் சோனியா காந்தியின் No.10 ஜன்பத் இல்லத்தில் வசித்து வந்தார். பின்னர், நீதிமன்றம் […]

பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மீள்குடியேற்ற இயக்குநரகம், இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் முன்னாள் அதிகாரிகளுக்காக பிரத்யேக வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், சரக்கு போக்குவரத்து, நிர்வாகம், பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பொறியியல் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த முகாம் இன்று டெல்லியில், கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மானெக்ஷா மையத்தில் காலை […]

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் கோவிட்-19 காரணமாக 10 இறப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7,383 ஆகக் குறைந்துள்ளது. ஒரு நாள் முன்பு இந்த எண்ணிக்கை 7,400 ஆக இருந்தது. இந்த காலகட்டத்தில், 17 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கோவிட் நோயால் இறந்த 10 பேரில் 3 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள், […]

டெல்லி மெட்ரோவில், ஒரு பெண் முகத்தில் ஃபேஸ் பேக் போட்டுக் கொண்டு புத்தகம் படித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெட்ரோவின் பொதுப் பெட்டியில் பயணம் செய்த பெண், யாரையும் தொந்தரவு செய்யாமல் முகத்தில் ஃபேஸ் பேக் போட்டுக்கொண்டு, ஒரமாக நின்று புத்தகம் படித்து வந்ததை வீடியோவில் காணலாம். இந்த வீடியோ, @thedopeindian என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது. தற்போது இதற்கு 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. இந்த […]

டெல்லியில் சாலையின் நடுவே ஆபத்தான முறையில் பைக் ஓட்டிய  இளைஞரை, போலீசார் கைது செய்து, அவருடைய பைக்கை பழைய இரும்பு கடைக்கு ‘பார்ட் பார்ட்டாக’ பிரித்துப் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யமுனா விகார், கிழக்கு டெல்லி பகுதியில் நடந்த இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவில், ஒரு இளைஞர் தன்னுடைய பைக்கில், ஒரு பேருந்தை ஓட்டும் டிரைவரை பயமுறுத்தும் வகையில், திடீரென அவரது கண்ணிமைக்கும் தூரத்தில் வந்து, […]