ஈரான் அமெரிக்காவின் முகத்தில் பலத்த அடியை கொடுத்தது என்றும், அமெரிக்கா இந்த போரில் எதையும் சாதிக்கவில்லை என்று அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீண்டும் எச்சரித்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தத்திற்குப் பிறகு முதன்முறையாக உரையாற்றிய அவர் “அமெரிக்க ஜனாதிபதி தனது அறிக்கைகளில் ஒன்றில் ஈரான் சரணடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். சரணடையுங்கள்! என்று கூறினார்.. இது இனி செறிவூட்டல் அல்லது அணுசக்தித் துறை […]

ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல்களில், 610 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், 4,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர், “கடந்த 13ம் தேதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த் நடைபெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 49 பெண்களும், […]

ஈரானில் குண்டுவீச்சு நடவடிக்கையைத் தொடர வேண்டாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் பகிரப்பட்ட ஒரு பதிவில், டொனால்ட் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை பெரிய மீறல் என்று விவரித்தார். இஸ்ரேல் அதன் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவரின் பதிவில் “இஸ்ரேல். அந்த குண்டுகளை வீசாதீர்கள். நீங்கள் செய்தால் அது ஒரு பெரிய […]

ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று, ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக […]

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில் ஈரான் அதனை மறுத்துள்ளது. ஈரானும் இஸ்ரேலும் 24 மணி நேரத்திற்குள் ஒரு கட்டப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். இரு நாடுகளும் போர்களை முழுமையாக நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறினார். இருப்பினும், ஈரான் அந்தக் கூற்றை மறுத்து, தாங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவும், போர் நிறுத்தத்திற்கான […]

அமெரிக்க தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடியை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ஈரானின் இராணுவ செய்தித் தொடர்பாளர் இன்று அமெரிக்காவுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட, அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் சட்டபூர்வமான இலக்குகளின் நோக்கத்தை விரிவுபடுத்தியதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். ஈரானின் மத்திய இராணுவ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபாகாரி, அமெரிக்கா தனது நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார். […]

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முக்கிய நாடுகள் ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள ஒரு நாடும் உள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் கண்டித்துள்ளார். ஈரானின் பொதுமக்கள், அணுசக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து பியோங்யாங்கின் […]