இந்தியா முழுவதும் வன்முறை சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கை பிப்ரவரி 28 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இதில், “ஈரானுக்கு ஆதரவான தீவிரவாத போக்குடைய மதபோதகர்கள் தூண்டுதல் உரைகள் நிகழ்த்துகிறார்களா” என்பதை கண்டறிந்து, மாநில அரசுகளும் பாதுகாப்பு அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய […]

ஈரான் மீது இன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டடு வருகிறது.. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.. ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் குடியிருப்பு அரண்மனை மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களை இஸ்ரேல் அறிவித்தது, பின்னர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் பங்கை உறுதிப்படுத்தினார்.. குண்டுகள் “எல்லா இடங்களிலும் வீசப்படும்” என்று எச்சரித்தார். ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேலில் நாடு தழுவிய […]

அமெரிக்கா, ஈரானில் “பெரும் போர்செயல்களை” தொடங்கியுள்ளதாக டொனால் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இன்று ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல பகுதிகளில், குறிப்பாக ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி அலுவலகங்கள் அருகே பல வெடிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தன. இந்த தாக்குதலை இஸ்ரேல் “முன்னெச்சரிக்கை தாக்குதல்” என்று விளக்கம் அளித்துள்ளது… ஈரான் மக்களுக்கு டிரம்ப் நேரடி அழைப்பு ஈரான் […]

ஈரானில் திங்கள்கிழமை, ஆயிரக்கணக்கான மக்களின் கைபேசிகளில் மர்மமான எச்சரிக்கை செய்தி ஒன்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த செய்தியில், பாரசீக மொழியில் “அமெரிக்க ஜனாதிபதி அதிரடி மனிதர். காத்திருந்து பாருங்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி தெரியாத ஒரு எண்ணிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம், டொனால் டிரம்ப் ஈரான் அரசை கடுமையாக விமர்சித்து வரும் சூழலில் நிகழ்ந்துள்ளது. அதே நேரத்தில், அமெரிக்கா மத்திய கிழக்கு பகுதியில் ராணுவ கப்பல்கள் மற்றும் போர் […]

உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்குள் வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு தற்காலிகமாக 10% சுங்கவரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார். சமீபத்தில் உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்த வரி விதிப்புகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பதிவில், “ வெள்ளை மாளிகையில் இருந்து உலகின் அனைத்து நாடுகளுக்கும் 10% சுங்கவரி விதிக்கும் ஆணையில் கையெழுத்திட்டது எனக்கு […]

இந்த வார இறுதிக்குள் அமெரிக்க ராணுவம் ஈரான்மீது இராணுவ தாக்குதலைத் தொடங்க தயாராக இருப்பதாகவும் ஆனால் அதற்கு அனுமதி வழங்குவது குறித்து அதிபர் டொனால் டிரம்ப் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.. வெள்ளை மாளிகைக்கு தகவல் சமீப நாட்களில் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா விமானப்படை மற்றும் கடற்படை படைகளை பெரிதும் குவித்துள்ளது. இதன் பின்னணியில், இந்த வார இறுதிக்குள் நடவடிக்கை எடுக்க இராணுவம் […]

பிரதமர் மோடி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டாம் என்று ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது. 140 கோடி இந்தியர்களுக்கான எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தியாவின் முதன்மை முன்னுரிமை என்று இந்தியா மீண்டும் மீண்டும் பகிரங்கமாகக் கூறியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். சந்தை நிலவரங்கள் மற்றும் மாறிவரும் சர்வதேச சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்தியா தனது எரிசக்தி கொள்முதலை பல்வகைப்படுத்தும் என்றும் […]

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய ஆவணங்களில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் இடம்பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த ஆவணங்களில், தற்போது 79 வயதாகும் டிரம்ப் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை வெள்ளை மாளிகையோ அல்லது அமெரிக்க நீதித்துறையோ எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை. ‘கேலண்டர் கேர்ள்ஸ்’ பார்ட்டிகள் ஆவணங்களில் இடம்பெற்ற தகவல்களின்படி, டிரம்ப் தனது மாரா-லாகோ […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கியூபாவிற்கு எண்ணெய் விற்கும் அல்லது விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிலிருந்தும் வரும் பொருட்களுக்கு வரி விதிக்கும் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இந்த நடவடிக்கை, நீண்ட காலமாக அந்தத் தீவு நாட்டிற்கு கச்சா எண்ணெயின் முக்கிய விநியோகிப்பாளராக இருந்து வரும் மெக்சிகோ மீது அழுத்தத்தை அதிகப்படுத்தும் ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. இந்த வார தொடக்கத்தில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷெயின்பாம், தனது அரசாங்கம் கியூபாவிற்கான எண்ணெய் […]

தன்னை கொலை செய்ய முயன்றதாக ஈரான் பொறுப்பேற்றால், அந்த நாடு “முழுமையாக அழிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னை குறிவைத்து நடைபெறும் எந்தவொரு கொலை முயற்சிக்கும் இந்த உத்தரவு நேரடியாக பொருந்தும் என்று அவர் தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், “எனக்கு மிகவும் உறுதியான உத்தரவு உள்ளது.. எதாவது நடந்தால், அவர்கள் இந்த பூமியின் மேற்பரப்பிலிருந்தே அழிக்கப்படுவார்கள்,” என்று கூறினார். […]