ஈரானின் உச்ச தலைவர் என்ற மொஜ்தபா கமெனி தற்போது சுயநினைவின்றி இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.. எனவே அவர் தனது கடமைகளை ஆற்ற இயலாத நிலையில் இருப்பதாகவும் ஒரு புதிய உளவுத்துறை குறிப்பு கூறியுள்ளதாக ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. மொஜ்தபாவின் உடல்நிலை குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அவர் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பிறகு பொதுவெளியில் காணப்படாத சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க மற்றும் […]

ஈரானுடனான மோதல் தொடங்கிய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் முக்கிய தேசிய உரையை ஆற்றினார். அதில், ஈரானின் இராணுவத் திறன்களுக்கு அமெரிக்கப் படைகள் ஒரு தீர்க்கமான அடியை கொடுத்துள்ளதாக அவர் உறுதியாகக் கூறினார். அமெரிக்கா விரைவில் பணியை முடிக்கும் என்று அறிவித்த அவர், முக்கிய நோக்கங்களை அடைவதற்கு மிக அருகில் இருப்பதாக வலியுறுத்தினார். இந்த இராணுவ நடவடிக்கை ஈரானின் ஏவுகணை உள்கட்டமைப்பு மற்றும் கடற்படையைக் கலைப்பதையும், […]

தற்போது நடைபெற்று வரும் போருக்கு மத்தியில், போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு ஈரானின் புதிய ஆட்சியின் ஜனாதிபதி அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்தார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப் “தனது முன்னோடிகளை விட மிகவும் தீவிரமயமற்றவராகவும், அதிக புத்திசாலியாகவும் இருக்கும் ஈரானின் புதிய ஆட்சி ஜனாதிபதி, அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளார்! ஹோர்முஸ் ஜலசந்தி திறந்து, தடையின்றி, தெளிவாக இருக்கும்போது நாங்கள் பரிசீலிப்போம். […]

ஈரானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம், ஈரானுடன் முறையான ஒப்பந்தம் எதுவும் இல்லாத நிலையிலும், அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரும் தருவாயில் உள்ளது என்பது தெரிகிறது. வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப், போரில் இருந்து அமெரிக்கா “மிக விரைவில் வெளியேறும்.. இரண்டு வாரங்களுக்குள், ஒருவேளை இரண்டு வாரங்கள், அல்லது மூன்று வாரங்கள்.. […]

ஈரான் தொடர்பான தொடர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டார். “ ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நாடுகள், சிறிது துணிச்சலை வளர்த்துக்கொண்டு, தங்களுக்குத் தேவையான எண்ணெயைத் தாங்களே பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.. ஈரான் எண்ணெய் குறித்து டிரம்பின் ஆவேசப் பேச்சு ‘Truth Social’ தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், இங்கிலாந்து உட்பட பாதிக்கப்பட்ட […]

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் ஏறக்குறைய ஒரு மாதமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் மற்றொரு இராணுவ நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் நிலவி வந்த சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார். “பிரதமர் மோடி அவர்களே, நாம் இருவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்தப் மோதலுக்கு ஒரு தீர்வைக் காண முடியும்,” என்று டிரம்ப் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் இராணுவ ரீதியாக முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது என்று கூறிய போதிலும், பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு ஒப்பந்தத்திற்காக கெஞ்சுகிறார்கள் என்று கூறினார். அமெரிக்காவின் முன்மொழிவை வெறுமனே பரிசீலித்து வருவதாக ஈரான் பகிரங்கமாகக் கூறிய நிலைப்பாட்டையும் அவர் நிராகரித்தார். தனது ட்ரூத் சோஷியல் பதிவில் பதிவிட்டுள்ள டிரம்ப் “ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள் மற்றும் ‘விசித்திரமானவர்கள்’. அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்யுமாறு எங்களிடம் கெஞ்சுகிறார்கள். ராணுவ ரீதியாக முற்றிலுமாக […]

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடன் நடந்து வரும் போருக்கு மத்தியில், மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது படைகளை நிலைநிறுத்துவதாகக் கூறப்படுவது குறித்து ஈரான் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ஈரான் பிராந்திய நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், இஸ்ரேலின் ‘மாயைக்கு’ அமெரிக்கா விலை கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். அமெரிக்கா மத்திய கிழக்குக்கு ஆயிரக்கணக்கான துருப்புக்களை […]