ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து. நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இரு நாடுகள் கடும் உயிர் சேதம் ஏற்பட்டது. இதனிடையே ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுமின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதால் தற்போதைய மோதல் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று, ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக […]

ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில் ஈரான் அதனை மறுத்துள்ளது. ஈரானும் இஸ்ரேலும் 24 மணி நேரத்திற்குள் ஒரு கட்டப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளார். இரு நாடுகளும் போர்களை முழுமையாக நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறினார். இருப்பினும், ஈரான் அந்தக் கூற்றை மறுத்து, தாங்கள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவும், போர் நிறுத்தத்திற்கான […]

அமெரிக்க தாக்குதல்களுக்கு ஈரானின் பதிலடியை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ஈரானின் இராணுவ செய்தித் தொடர்பாளர் இன்று அமெரிக்காவுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட, அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் சட்டபூர்வமான இலக்குகளின் நோக்கத்தை விரிவுபடுத்தியதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார். ஈரானின் மத்திய இராணுவ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபாகாரி, அமெரிக்கா தனது நடவடிக்கைகளின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார். […]

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முக்கிய நாடுகள் ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள ஒரு நாடும் உள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் கண்டித்துள்ளார். ஈரானின் பொதுமக்கள், அணுசக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து பியோங்யாங்கின் […]

ஹார்வர்ட் பல்கலைக்கழக படிப்புகளில் சேர அமெரிக்காவிற்கு வரும் புதிய வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். உயர்கல்வி, குறிப்பாக ஹார்வர்டு மீதான அதன் அடக்குமுறையை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது. குடியரசுக் கட்சி முன்னதாக பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்திருந்தது, அந்த உத்தரவு நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க […]