இந்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் (Employees’ Provident Fund Organisation) காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பொதுவாக ஐஏஎஸ் , குரூப் 1, வங்கித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் பெரும்பாலான தேர்வர்கள் இந்த தேர்வில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் இதர தேர்வுகளோடு ஒத்து போவதால், EPFO அறிவிப்புக்கு எதிர்பார்ப்பு இருந்து […]
epfo
தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தின் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான ஊதியத் தரவு விவரங்கள் வெளியிடப்பட்டது. அதன்படி 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 18 லட்சத்து மூவாயிரம் புதிய ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தில் பங்களிப்பு செய்த ஊழியர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 52 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் […]
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக பல சேவைகளை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் எஸ்எம்எஸ் மற்றும் ஆன்லைன் மூலம் PF தொகையின் இருப்பை சரி பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம். குறுஞ்செய்தி மூலம் இருப்பை எப்படி பார்ப்பது…? உங்கள் UAN எண் இபிஎப்ஓ-வில் பதிவு செய்யப்பட்டிருந்தால், உங்கள் PF இருப்பு பற்றிய தகவலை SMS மூலம் பெறலாம். இதற்கு, 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO என […]
ஓய்வூதியம் பெறுபவர்களின் உயிருடன் இருப்பதற்க்காண இன்றியமையாத ஆவணம் ஆயுள் சான்றிதழாகும், இது அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய விநியோகஸ்தர், வங்கி அல்லது தபால் அலுவலகம் போன்ற ஏஜென்சியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும், மேலும் ஓய்வூதியம் பெறுபவரின் பணியிடத்தில் அவரது மரணத்திற்குப் பிறகு பணம் செலுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. ஓய்வூதியம் வழங்குவதற்கு முன், வழக்கமாக வருடத்திற்கு ஒருமுறை தேவைப்படும் இந்தச் சான்றிதழை வழங்குவதற்கு அரசாங்கமும் காப்பீட்டு நிறுவனங்களும் அறிவுறுத்துகின்றன. இதற்கு முன்பு இந்த சான்றிதழை […]
இபிஎப் உறுப்பினர்கள் இபிஎப் தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை பதிவு செய்ய EPF i-Grievance Management System-ஐ பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. EPFIGMS என்பது இபிஎப்ஓ வழங்கும் சேவைகளுக்கான குறைகளை நிவர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட போர்டல் ஆகும். குறைகளை எந்த இடத்திலும் பதிவு செய்யலாம் மற்றும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு வந்து சேரும். குறைகளை புது தில்லியில் உள்ள தலைமை […]
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில சேவைகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது, அதன் படி, வாடிக்கையாளர்கள் அந்த புதிய சேவைகளை தங்கள் வீட்டில் இருந்தே முடியும். ஓய்வூதியம் பெறுவோர், அந்தச் சேவைகளைப் பெற, அருகில் உள்ள எந்தவொரு அலுவலக கிளைக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இபிஎப்ஓ வழங்கும் சேவைகள்: ஓய்வூதிய கோரிக்கைகளை UMANG ஆப் மூலம் அல்லது ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும். மேலும் […]
ஓய்வு பெற்ற எந்த ஒரு ஊழியருக்கும் ஓய்வூதியம் மிகவும் முக்கியமானது. இது அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களை பொருளாதார ரீதியாக பெரும் உதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அவசர காலங்களில் உதவுகிறது.மூத்த குடிமக்களுக்கு ஆயுள் சான்றிதழ் மிக முக்கியமான ஆவணம். ஏனெனில் இது ஓய்வூதியம் தொடர்பான பணிகளில் பயன்படுத்தப்படுகிறது. பென்சன் வாங்கும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் தாங்கள் உயிரோடு தான் இருக்கிறோம் என்பதை உறுதி செய்யும் […]
வரும் 12-ந் தேதி ஓய்வூதியதாரர்களுக்கு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது . சென்னை தி.நகரில் உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், சென்னை மத்திய மண்டல அலுவலகம், சிவஞானம் சாலை, சென்னை 600 017 என்ற முகவரியில் 12.01.2023 அன்று காலை 11.00 மணியளவில் ஓய்வூதியதாரர்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஓய்வூதியதாரர்கள் புகார்களை கீழ்கண்ட தபால் நிலையங்களுக்கு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் Email-dochennaicitycentral@indiapost.gov.in மூலமாகவோ அல்லது […]
சென்னை துறைமுக ஆணையம் மற்றும் கப்பற்கூட வாரியம் ஆகியவற்றின் ஓய்வு பெற்றவர்களுக்கான, 2022 ஆம் ஆண்டிற்கான ஆயுள் சான்றிதழ் சரிபார்க்கும் பணி 1.11.2022 முதல் தொடங்கியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழை நேரடியாக வந்து சமர்ப்பித்தலை தவிர்க்கும் வகையில், கீழ்கண்ட வழிமுறைகளை ஓய்வூதியதாரர்களின் வசதியை கருதி சென்னைத் துறைமுக ஆணையம் செய்துள்ளது. எப்படி அனுப்புவது…? ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், தங்களின் ஆயுள்சான்றிதழை கணினி மூலம் […]
ஆன்லைன் மூலம் இபிஎஃப் இருப்பு தொகை சரி பார்ப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.. EPFO அதன் சேவைகளை, அமைப்புகளை பல வழிகளில் செயல்படுத்தவும் மாற்றியமைக்கவும் தொடர்ந்து முயன்று வருகிறது, அந்த வகையில் இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் இபிஎஃப் அல்லது PF பயனாளிகள் யுனிவர்சல் கணக்கு எண் (UNA) இல்லாமல் கூட உங்கள் பிஎஃப் மற்றும் ஈபிஎஃப்ஓ தொகையை சரிபார்க்க முடியும். இதற்காக இபிஎஃப்ஓ சந்தாதாரர் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் நாம் சரிபார்த்துக் […]