அதிமுக சார்பில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ள எடப்பாடி பழனிசாமி, கோவை வடவள்ளி பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசுகையில், கோயிலை கண்டாலே திமுகவுக்கு கண்ணு உறுத்துகிறது. அதிலிருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து கல்லூரி கட்ட ஆரம்பிக்கிறார்கள். இது எப்படி நியாயம், தெய்வபக்தி படைத்த மக்கள் எதற்காக கோயில் உண்டியலில் பணத்தை போடுகிறார்கள், கோவிலை மேம்படுத்ததானே.. ஆனால் அறநிலையத்துறை மூலம் கோவிலுக்கு வரும் […]

கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு கடுமையாக பதிலளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருக்கோவில்கள் சார்பில் தற்போது 25 பள்ளிகள், 1 பாலிடெக்னிக் கல்லூரி, 9 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மட்டும் 22,455 மாணவர்கள் பயின்று வருகின்றனர். […]

பாஜகவின் டப்பிங் வாய்ஸில் பேசிய பழனிசாமி, தற்போது பாஜகவின் ஒரிஜினல் வாய்ஸில் பேசுகிறார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் ரூ.846 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் ஸ்டாலின் பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அப்போது கலைஞர் கருணாநிதியின் ஆட்சியின் நீட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். திருவாரூர் என்றாலே, தேரும், கலைஞரும் தான் நினைவுக்கு வரும்.. தமிழ்நாட்டில் […]

அதிமுகவின் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண பாடல், லோகோ வெளியீட்டு நிகழ்ச்சியில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்ததால் தமிழ்நாடு ஏற்றம் பெற்றது.. கடந்த 50 மாத ஸ்டாலின் மாடல் ஆட்சியில் மக்கள் பெற்ற வேதனைகள், துன்பங்கள், கொடுமைகள் அத்தனையும் மக்களிடம் பட்டியலிட்டு எடுத்து சொல்லி, திமுக ஆட்சியை […]

விருதுநகர் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் நிவாரணம் கோரி போராடிய மக்களை விருதுநகர் எஸ்.பி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து “ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்” என்று […]

ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்திட உதவ வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் பெண்ணின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் கைகாட்டி புதூர் பகுதியை சேர்ந்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை உள்ளிட்டோர், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நேற்று புகார் மனு அளித்தனர். அந்த மனு குறித்து இறந்த பெண்ணின் தந்தை அண்ணாதுரை கூறியதாவது; திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி […]

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தேமுதிக இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதற்கிடையெ பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, சமீபத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் […]

அதிமுகவில் தாமரைக்கனி மகன் இன்பத் தமிழனுக்கு முக்கிய பதவி அளித்து இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அன்றைய அதிமுகவின் அசைக்க முடியாத நபராக விளங்கியவர் தாமரைக்கனி. ஐந்து முறை ஸ்ரீவில்லிப்புத்தூர் எம்எல்ஏவாக இருந்தவர் தாமரைக்கனி. காலசூழலால் ஜெயலலிதாவை எதிர்க்கும் நிலைமை தாமரைக்கனிக்கு ஏற்பட்டது. இதன் விளைவு… மகன் அதிமுக சார்பில் போட்டியிட, சுயேச்சையாக நின்று மகனிடம் தோற்று போனார் தாமரைக்கனி. தந்தையும் – மகனும் கடைசி வரை சேராமலேயே போய்விட்டனர். தாமரைக்கனியும் […]

31 வருடங்கள் தமிழகத்தில் ஆட்சி புரிந்த, பொன் விழா கண்ட அதிமுகவை பாஜக மட்டும் அல்ல எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஆவேசமான உரையாற்றினார். அந்த உரையில், “அதிமுக முடிந்துவிடும்” என மு.க. ஸ்டாலின் பேசுவது வெறும் பகல் கனவு எனக்கூறி அவர் கடுமையாக தாக்கினர். “நாட்டை காக்க […]

எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆங்கில நாள்தழுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்தார்.. அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார். அதிமுகவில் பிரிந்து சென்ற யாரையும் ஒன்றிணைக்கவில்லை என்றும், அவர்கள் கட்சி விவகாரத்தை அவர்களே பேசி முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் தமிழ்நாட்டில் தேசிய […]