செயலிழந்த பான் கார்டு கொண்டுள்ள பயனாளர்கள் வங்கிகளில் வைத்துள்ள நிரந்தர வைப்புத்தொகைக்கு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதியுடன் அந்த […]
income tax
கேரளாவில் உள்ள நடிகை பேர்லி மானி உட்பட 10 பிரபல யூடியூபர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். வீடியோ கன்டென்ட் கிரியேட்டர்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்துவதில்லை என புகார் வந்ததை அடுத்து சோதனை நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். முதன்முறையாக கேரளாவில் நடிகை பேர்லி மானி உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை […]
ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம், கோவை மண்டலப்பிரிவு வரி ஏய்ப்பு குறித்தான புகார்களை கவனித்து வருகிறது. உளவுத்துறை தகவலின் பேரில் 15ஆம் தேதி சில நிறுவனங்களின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இயக்குநரகம் சோதனை மேற்கொண்டது. அதில் நிறுவனங்கள் போலியான உள்ளீட்டு வரி வரவு மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. சோதனையில், ஜிஎஸ்டி வருமானம் தொடர்பான OTP களைப் பெறப் பயன்படுத்தப்படும் பல மொபைல்போன்கள், இ-வே பில்கள், போலி பில்கள், பல்வேறு […]
நேர்முக வரிகள் வசூலித்தல் மற்றும் நிர்வாகம் தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை மத்திய நேர்முக வரிகள் வாரியம் அவ்வப்போது பொது வெளியில் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2013-14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேர்முக வரிகள் வசூல் 121.18 சதவீதம் அதிகரித்து 2021-22 நிதியாண்டில் ரூ.14,12,422 கோடியாக இருந்தது. 2013 -14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேர்முக வரிகள் வசூல் 160.17 சதவீதம் அதிகரித்து 2022-23 […]
கர்நாடக மாநிலத்தின் கடந்த மாதம் 31-ம் தேதி சில கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது. மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான ஆதாரங்களும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வங்கிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களில் தெரியவந்துள்ளது. எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் நடந்த இந்த முறைகேடுகளில் சில கூட்டுறவு சங்கங்களும், சில வணிக நிறுவனங்களும் உடந்தையாக இருந்தது தெரிய […]
2022-23-ம் நிதியாண்டுக்கான (தற்காலிக) நிகர நேரடி வரி வசூல் ரூ.16.61 லட்சம் கோடியாக உள்ளது. 2021-22 நிதியாண்டில் ரூ.14.12 லட்சம் கோடியாக இருந்த நிலையில், வரிவசூலிப்பு 2022-23ம் நிதியாண்டில் 17.63 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-23ம் நிதியாண்டுக்கான நேரடி வரி வருவாய் ரூ.14.20 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருந்தது. பின்னர் அந்த தொகை ரூ.16.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டின் […]
இந்தியாவில், டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அதிகரித்து வருகிறது.. சாதாரண பெட்டிக் கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை அனைத்து இடங்களிலும் தற்போது யுபிஐ பேமெண்ட் முறை அதிகரித்துள்ளது.. GPay, Phone Pe, Paytm போன்ற செயலிகள் மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தி வருகின்றனர்.. ஆனால் மறுபுறம், வீட்டில் பணத்தை வைத்திருக்கும் பாரம்பரிய முறையை நம்பும் பெரும்பான்மையான இந்தியர்கள் இன்னும் உள்ளனர். அதில் நீங்களும் ஒருவராக இருந்தால், கட்டாயம் […]
வரி செலுத்துவோருக்கான ஆண்டு தகவல் அறிக்கை மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரி செலுத்துவோருக்கான ஆண்டு தகவல் அறிக்கை மொபைல் செயலியை வருமான வரித்துறை தொடங்கியுள்ளது. இதில் வரி செலுத்துவோர் AIS for Taxpayer என்ற செயலியை கூகுல் ப்ளே மற்றும் ஆப் ஸ்டோர்களில் இலவசமாக தகவல்களை அறிந்து கொள்ளலாம். வரி பிடித்தம், வட்டி, ஈவுத்தொகை, பங்கு பரிவர்த்தனைகள், வரித்தொகை, வருமான வரி திரும்ப பெறுதல் மற்றும் இதர தகவல்களை […]
ரூ.800 கோடி மதிப்பிலான TMT கம்பிகள் ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் சட்ட விரோதமாக விற்கப்பட்ட விவகாரத்தில், 3 நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். டிஎம்டி கம்பிகள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 3 முக்கிய வரி செலுத்துபவர்களின் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. விசாரனையில் விலைப்பட்டியல் இல்லாமல் TMT கம்பி விற்பனைக்கு சட்ட விரோதமாக அனுமதி அளிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த விற்பனையில் பணப்பரிவர்த்தனை முற்றிலும் ரொக்கப்பண அடிப்படையிலேயே நடைபெற்று இது […]
தொழிலதிபர் சேகர் ரெட்டி அவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ,சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. 2015-16ஆம் மதிப்பீட்டு வருடத்திற்கு 20 லட்சம் ரூபாயும 2017-18 ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு 82 கோடியே 12 லட்சம் ரூபாயும் வரியாக செலுத்த வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமானவரித் துறையின் இந்த நோட்டீஸின் மீது […]