கர்நாடக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாஜக 30 சதவீதம் பேர் குற்ற பின்னணியை கொண்டவர்களாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 10ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் தாங்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களின் குற்றப் பதிவு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான தேர்தல் கண்காணிப்பு அமைப்பான ஏடிஆர் அறிக்கையின்படி, காங்கிரஸ் கட்சி 31 சதவீதமும், பாஜக 30 சதவீதமும், ஜேடிஎஸ் வேட்பாளர்கள் 25 சதவீதமும் […]

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் மோடி மீது திடீரென தொண்டர் ஒருவர் தனது மொபைல் போனை தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள மைசூருவில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோ நடைபெற்றது. அப்போது பாதுகாப்பு மீறலில் பிரதமர் வாகனத்தின் மீது மொபைல் போன் ஒன்று வீசப்பட்டது. காவல்துறையின் கூற்றுப்படி, பெண் பாஜக தொண்டர் “உற்சாகத்தில்” தொலைபேசியை எறிந்தார், மேலும் […]

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அரசு போக்குவரத்துப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். உடுப்பி மற்றும் தட்சிண கன்னடா மாவட்டங்களில் ராகுல் காந்தியின் தேர்தல் […]

கர்நாடகாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற மாட்டார் என கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா தேர்தல் பிரச்சார பிரச்சார கூட்டத்தில் கூறுகையில், ஷெட்டர் பாஜகவை முதுகில் குத்தியுள்ளார் என்றும், ஹூப்ளி-தர்வாட்-மத்திய தொகுதியில் போட்டியிடும் அவர் வெற்றி பெற மாட்டார் என்பதை ரத்தத்தில் எழுதி கொடுக்கலாம் என்றும் […]

பாஜக முக்கிய தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், பாஜக முக்கிய தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக மற்றும் மாநிலங்களவையில் இருந்து ராஜினாமா செய்ய போவதாக அறிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களின் தன்னை மோசமான நடத்தியதாகவும், அவமானத்தால் நான் மிகவும் வேதனைப்பட்டதாகக் கூறினார். மே 10 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் […]

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் யுவ நிதி’ என்னும் திட்டத்தின் கீழ் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு கர்நாடகாவுக்கு வந்த, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தனது கட்சி, ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவை கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றும் என்று கூறியுள்ளார். கோலாரில் நடைபெற்ற பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவர் 4 தேர்தல் […]

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவடி நேற்று காங்கிரஸில் இணைந்தார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், கர்நாடகாவின் கட்சிப் பொறுப்பாளருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோரை சந்தித்துப் பேசிய பிறகு லட்சுமண் சவடி கட்சியில் இணைந்தார். கர்நாடகாவில் மே பத்தாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. […]

கர்நாடக முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சியின் முதல்வராக இருப்பவர் பசவராஜ் பொம்மை. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவிலுக்கு தனது மனைவியுடன் சாமி கும்பிடுவதற்காக சென்று இருக்கிறார். அப்போது தான் இவரது ஹெலிகாப்டரில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது இந்த விபத்தில் எந்தவிதமான சேதமோ, எதுவுமில்லை என அரசு தரப்பு அறிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சிகளும் […]

கர்நாடக மாநிலத்தின் கடந்த மாதம் 31-ம் தேதி சில கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது. மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான ஆதாரங்களும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வங்கிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களில் தெரியவந்துள்ளது. எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் நடந்த இந்த முறைகேடுகளில் சில கூட்டுறவு சங்கங்களும், சில வணிக நிறுவனங்களும் உடந்தையாக இருந்தது தெரிய […]

கர்நாடகாவில் மே 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் சட்டமன்றக் கட்சித் தலைவருமான ஹெச்.டி குமாரசாமி வாக்காளர்களுக்கு மேலும் ஒரு வாக்குறுதியை அறிவித்தார். இந்த தேர்தலில் ஜேடிஎஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்ற தனித்துவமான வாக்குறுதியை ஹெச்.டி.குமாரசாமி அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “கோலார் மாவட்டத்தில், விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்ய பெண்கள் தயாராக […]