சென்னையை அடுத்துள்ள கோவளத்தில் நடைபெற்ற 31-வது தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கலந்துகொண்டு பேசினார். நதிநீர் விவகாரங்களில் மோதல் போக்கை மாற்றிவிட்டு, மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது என்று அவர் வலியுறுத்தினார். அரசியல் எல்லைகளை நதிகள் அறிவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், கர்நாடக அரசு மற்ற மாநிலங்களின் உரிமைகளை மதிக்கிறது என்றும், அதே நேரத்தில் கர்நாடகத்துக்கான சட்டப்பூர்வமான நீர் பங்கை […]

மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசின் ஒப்புதலுக்காக கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளது. 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக கர்நாடக பெரும் மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் துறை மற்றும் மண்டியா மாவட்ட பொறுப்பு அமைச்சர் என். செலுவராயசாமி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை நிறைவேற்ற சுமார் 12,500 ஏக்கர் நிலம் தேவைப்படும் நிலையில், தற்போது சுமார் 20,000 ஏக்கர் நிலம் அடையாளம் […]