fbpx

வதந்தி பரப்பியவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிற பொய்யான செய்தியை வேண்டுமென்றே சமூக ஊடகங்களின் மூலமாகப் பரப்பி, நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியவர்கள் மீது தமிழ்நாடு …

பிரபல புகைப்பட கலைஞர் மற்றும் புகைப்பட செய்தியாளர் ஸ்டாலின் ஜேக்கப் செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்த போது கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் பயணித்த விஷ்ணு என்ற நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் இந்த …

தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாக ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் சென்னையில் நேற்று நடைபெற்றது‌. முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் வலிமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், 2024 தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கான வியூகமாக பார்க்கப்படுகிறது . பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், …

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21-ம் தேதி தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். பாரம்பரிய …

தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை நாட்டினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், IND-TN-06-MO-3051 என்ற பதிவெண் கொண்ட நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், …

கர்நாடக மாநில வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் உயிரிழந்த நபர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட …

மழையினால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி மாவட்டங்களை பார்வையிட அமைச்சர் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; கடந்த சில நாட்களில் தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் …

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் …

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் நேற்று நடந்தது. இதில் அரவிந்த் ராஜ் என்னும் மாடுபிடி வீரர், யாரும் எதிர்பாராத விதமாக வாடிவாசலிலிருந்து வெளியே வந்த காளையின் தாக்குதலால் படுகாயமடைந்தார். பின் அவரை அங்கிருந்த மருத்துவக்குழுவினர் மீட்டு முதலுதவி அளித்தனர். பின், மேல் …

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 4-ம் தேதி காந்திநகரில் உள்ள வீட்டிற்கு சென்று அவரிடம் …