காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், தேசிய ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குநரகம் (ED) தாக்கல் செய்த புகாரை டெல்லியில் உள்ள ரவுஸ் அவென்யூ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் மத்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த புகார் ‘விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று […]

அமலாக்கத்துறை விசாரித்து வரும் நேஷ்னல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றம் தடுப்பு பிரிவு காவல்துறை வழக்கு பதிவு. அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரின் புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர். கடந்த 2008-ம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மூடப்பட்டபோது அதை நடத்திய அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 90 கோடி […]

பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரரியா பகுதியில் பிரச்சாரம் செய்யும் போது ஒரு சிறுவனுடன் நடந்த உரையாடலில் ஈடுபட்ட காட்சி தான் இதற்கு காரணம். அந்த வீடியோவில், ராகுல் காந்தி கூட்டத்தில் நடந்து செல்லும்போது, ஒரு சிறுவன் அவரை அணுகி கைகுலுக்குகிறான். பிறகு “நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள், […]

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இன்று மீண்டும் வாக்கு திருட்டு பாஜகவை கடுமையாக குற்றம்சாட்டினார்.., ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் “பிரேசிலிய மாடல்” எனப்படும் ஒரு பெண் பல்வேறு பெயர்களில் பல முறை வாக்களித்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டார். அவர் இதை “H-Bomb” (Haryana Bomb) எனும் புதிய ஆவணத் தொடரின் ஒரு பகுதியாக வெளியிட்டார். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி “காங்கிரஸ் தேர்தலில் வெறும் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. […]

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை பீகாரில் நடந்த தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார்.. முசாபர்பூரில் நடந்த இந்தியா கூட்டணியின் பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரதமர் “ நீங்கள் மோடி ஜியை வாக்குகளுக்காக நாடகம் செய்யச் சொன்னால், அவர் அதை செய்வார். நீங்கள் அவருக்கு வாக்களித்து மேடைக்கு வந்து நடனமாடச் சொன்னால், அவர் நடனமாடுவார்.” என்று தெரிவித்தார்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மாநில […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவின் எண்ணெயை இந்தியா வாங்காது என்ற தெரிவித்ததை தொடர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி பிரதமர் டிரம்ப் மற்றும் அமெரிக்காவைப் பார்த்து பயப்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும் அவரின் பதிவில் “ பிரதமர் மோடி டிரம்பைப் பார்த்து பயப்படுகிறார். ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவரது கருத்துக்களுக்கு முரணாக […]

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று கொலம்பியாவில் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தை விமர்சித்தார், இன்று இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் அதன் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கூறினார். கொலம்பியாவின் EIA பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய காந்தி, “கட்டமைப்பு குறைபாடுகள்” என்று விவரித்ததை சுட்டிக்காட்டி, நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட மரபுகள் செழிக்க இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் பேசிய அவர் “இந்தியா பொறியியல் […]

தவெக தலைவர் விஜய் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்; 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் காங்கிரஸுக்கு கூடுதல் சீட்கள் வேண்டும் என்று கட்சியினர் தங்களுடைய ஆசையை சொல்கிறார்கள். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தாது. கட்சியினர் கருத்துகளை காங்கிரஸ் தலைமையிடம் தெரிவிப்பேன். ஆனால், முடிவு எடுப்பது காங்கிரஸ் தலைமையும், பொறுப்பாளர்களும் தான். தவெக-வுடன் கூட்டணி குறித்து காங்கிரஸ் […]

வாக்காளர் நீக்க மோசடிகளில் ஈடுபட்டவர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.. அவரின் குற்றச்சாட்டுகள் தவறானது என்றும் ஆதாரமற்றது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை நிராகரித்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஸ்ரீ ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை. ராகுல் காந்தி தவறாகக் கருதியது போல, எந்தவொரு வாக்காளரையும் […]