சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், பரிகார நிலையம் நடத்தி வந்த 50 வயது நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அவரது பரிகார நிலையம் மற்றும் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் லேப்டாப், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்த விஜயராஜா, எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தார். அதே நேரத்தில் ‘சனீஸ்வரா’ என்ற பெயரில் […]

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டைச் சுற்றி திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, அவரது வீடு உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதலே தில்லைநகர் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. நான்கு வாகனங்களில் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கே.என்.நேருவின் வீட்டுக்குள் சென்று சோதனையை தொடங்கினர். வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் வழக்கு […]

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 2016-21 வரை எம்எல்ஏவாகப் பதவி வகித்தவர் சத்யா பன்னீர்செல்வம். அதே காலத்தில் அவரது கணவரான பன்னீர்செல்வம் நகர்மன்றத் தலைவராக இருந்தார். பன்னீர்செல்வம் நகர்மன்றத் தலைவராக பதவி வகித்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அதன் பின்னர் கட்சிப் பணிகளில் தீவிரமாக சத்யா பன்னீர்செல்வம் […]

போலியாக அரசியல் நன்கொடை, மருத்துவம் மற்றும் கல்விக் கட்டண விலக்குகள் தொடர்பாக தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வருமான வரித்துறை திடீர் சோதனைகளை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாக அரசியல் கட்சிகள் மற்றும் தொண்டு அறக்கட்டளைகளுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்ட நிறுவனங்களின் 150 வளாகங்களில் ஒருங்கிணைந்த முறையில் சோதனை நடத்தியது. 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரிச் சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து விரிவான பகுப்பாய்விற்குப் பிறகு, […]