சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நீட் பயிற்சி எடுத்து வந்த மாணவன் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேவுள்ள அம்மம்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவன் சந்துரு. இந்த மாணவன் அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வந்தார். மேலும் டாக்டராக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையத்திலும் சேர்ந்து […]
Salem
சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறவுள்ளது. சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று ஏற்காடு பிரதான சாலையில் அமைந்துள்ள சி.எஸ்.ஐ பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் […]
80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரண்டு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்பளித்து இருக்கிறது சேலம் நீதிமன்றம். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள பெரியசோரகை பகுதியைச் சார்ந்தவர்கள் சீனிவாசன்(20) மற்றும் விக்னேஷ் (23). கூலி தொழிலாளிகளான இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இவர்களின் தொல்லையால் […]
வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு காலியாக உள்ள 5 இடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை ஆவின் வெளியிட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நேரடித் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க […]
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மூலங்காடு பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் குமார் 43 அதே பகுதியில் சேர்ந்த பரமசிவம் (35) எந்த வருடம் இவருக்கு பொது குடிநீர் குழாயில் குழி தோண்டிக்கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டிருக்கிறது. பரமசிவத்தை குமார் கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த பரமசிவத்தின் தாயார் சின்னம்மாள் குமாரை தடுக்க முயற்சித்தபோது அவரை அடித்து கீழே தள்ளியுள்ளார். இதன் காரணமாக சின்னம்மாள் பலத்த காயமடைந்து சேலம் […]
சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரை கைது செய்ய சேலம் தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998-ம் ஆண்டு தெய்வக்கனி என்பவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பொறியாளராக பணியில் சேர்க்கப்பட்டார்.. அவர் 2011-ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.. இந்த உத்தரவை எதிர்த்து அவர், 2013-ம் ஆண்டு சேலம் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2021-ம் ஆண்டு தெய்வக்கனியை பணியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட்டது… ஆனால் அப்போதைய […]
தொலைத்தகவல் தொடர்புத்துறை, தமிழ்நாட்டில் உள்ள உரிமம் பெற்ற சேவைகள் அமைப்பு, பிஎஸ்என்எல் தமிழ்நாடு ஆகியவற்றால் அளிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை – சேலம் மற்றும் மத்திய புலனாய்வு உள்ளிட்ட சட்ட அமலாக்க முகமைகள் மாவட்டத்தில் உள்ள மெய்யனூர் மற்றும் கொண்டாலம்பட்டிப் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான பகுதிகளில் கூட்டாக திடீர் சோதனை மேற்கொண்டன. இங்கு சட்டவிரோதமான தொலைத்தகவல் தொடர்பு அமைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சிம் கார்டு பெட்டிகள், சர்வதேச […]
தமிழகத்தில் சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் தற்போதைய ஆளும் தரப்பாக இருக்கக்கூடிய திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தபோது கூட இந்த அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடவில்லை என்று […]
சேலம் மாவட்டத்தில் கள்ளக்காதலியை பார்க்க வருவதாக கூறி அவரது மகளை கர்ப்பம் ஆக்கிய நபரை காவல்துறை கைது செய்துள்ளது. சேலம் மாவட்டம் சேலதாம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் 60 வயது பெண்மணி. இவருக்கு 40 வயதில் மாற்றுத்திறனாளி மகன் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில் இந்த 60 வயது பெண்மணிக்கும் சிவதாபுரம் பகுதியைச் சார்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்திருக்கிறது. இதனால் சுப்பிரமணி அடிக்கடி இந்த பெண்மணியின் வீட்டிற்கு வந்து […]
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கோழிகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒருவார முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இராணிகட் என்னும் வெள்ளைக்கழிச்சல் நோய் கோழிகளில் நச்சுயிரியால் ஏற்படும்தொற்று நோய் ஆகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் வள்ளை அல்லது பச்சை கழிச்சல், மூச்சுத்திணறல், நடுக்கம், வாதம் மற்றும் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைதல் ஆகியவை ஏற்படும். இந்நோய் பாதித்த […]