இந்தோனேசியாவில் 240 பயணிகளுடன் ஜாவா கடலில் சென்றுகொண்டிருந்த பயணிகள் கப்பல் திடீரென தகவல் தொடர்பை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கப்பலைத் தேடும் பணியை மீட்புப் படையினர் இன்று தொடங்கியுள்ளனர். கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவில் இருந்து, போர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமந்தன் மாகாணத்தின் தலைநகரான பஞ்சர்மசினை நோக்கி Virgo Transport 8 என்ற கப்பல் சென்று கொண்டிருந்தது. ஜாவா கடலில் பஞ்சர்மசின் […]

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதலாவது நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் ஐஎன்எஸ் மாஹே மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி தலைமை தாங்கினார். கொச்சியில் உள்ள கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் கட்டமைத்துள்ள ஐஎன்எஸ் மாஹே, அது வடிவமைத்த 8 கப்பல்களில் முன்னணி கப்பலாகும். பெல், எல் அண்ட் டி டிஃபென்ஸ், மஹிந்திரா டிஃபென்ஸ் சிஸ்டம்ஸ், என்.பி.ஓ.எல் […]

கேரள கடற்கரையில் சிங்கப்பூர் கொடியுடன் வந்த கொள்கலன் கப்பலில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும், ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீப்பிடித்து எரியும் கப்பலில் இருந்து 18 பணியாளர்களை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் மீட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. மும்பையில் உள்ள கடல்சார் செயல்பாட்டு மையம், காலை 10:30 மணியளவில் கொச்சியில் உள்ள அதன் […]