குறுவை சாகுபடிக்காக எதிர்வரும் 12ஆம் தேதி முதல் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட இருக்கிறது. இதனைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களில் இருக்கின்ற ஆறுகள் மற்றும் சிறு,குறு வாய்க்கால்களின் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீர்வளத் துறையின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து வருகின்றார். […]

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ 1கோடி 8லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்கள். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் மகேஸ் ஆகியோர் ரூபாய் 50,10.000 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய வாகனங்களை 60 பயனாளிகளுக்கு வழங்கினார். இதே போல் கலைஞர் […]

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் ஆலம்பட்டியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “கருணாநிதி மகன் என்ற பின்புலத்துடன்தான் ஸ்டாலின் தி.மு.க தலைவரானார். அதைத் தொடர்ந்து தற்போது முதலமைச்சர் ஆகியிருக்கிறார். ஆனால், எடப்பாடியார் அப்படி அல்ல, 50 ஆண்டுக்கால பொதுவாழ்க்கையில் கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக உயர்ந்து, கழகப் பொதுச்செயலாளராகி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகி இருக்கிறார். தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 25 பேர் பலியாகி இருக்கின்றனர். இதனால் தமிழகத்துக்கு […]

ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் இருக்கின்ற பகநாகா என்ற பகுதியில் நேற்று இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர சம்பவம் காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 261 ஆக அதிகரித்து இருக்கிறது. 900 க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒடிசா ரயில் விபத்து குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணி அளவில் ஒரிசாவில் இருக்கும் உதயநிதி தலைமையிலான தமிழக அமைச்சர்கள் குழுவுடன் காணொளி மூலமாக […]

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலினின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பயணத்தின் மூலமாக ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொடர்பாக முன்னக்கப் முரணான தகவல்கள் வெளியாகி இருப்பதாக குற்றம் சுமத்தி இருக்கிறார். மேலும் இந்த ஆட்சியின் பாராமுகம் காரணமாக, பல்வேறு தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்திருக்கிறார். இதனால் ஏராளமான இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோய் விட்டதாக அவர் […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நாளை சந்தித்து பேச இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாவது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற அவசர சட்டத்திற்கு எதிராக திமுகவின் ஆதரவை பெறுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது தலைநகர் டெல்லியில் அரசு அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு மத்திய அரசு அவசர சட்டம் […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோரை நியமிக்கும் போது அரசன் அனைத்து திட்டங்களும் தேவையான மக்களை சென்றடைவது உறுதி செய்யப்படும் விதத்தில் பணி புரிய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இந்த பணிகளை அரசு அடிக்கடி அதிகாரிகள் மூலமாக சோதனை செய்து வந்த நிலையில், முறையாக பணியை செய்யாத காரணத்தினால் தமிழக அமைச்சரவையில் அதிரடியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது தமிழக மாவட்டங்களுக்கான பொறுப்பு அமைச்சர்கள் […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 9 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார் முன்னதாக சென்னை விமான நிலையத்தில் முதல்வருக்கு அமைச்சர்கள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சி பொறுப்பேற்ற 2 வருடங்களில் 2 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக […]

தமிழ்நாட்டில் கழிவுநீர் மரணங்களை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதன்படி பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை மனிதர்களே சுத்தம் செய்யும் நடைமுறை ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் களங்கமாக விளங்குகிறது. ஆகவே அது நவீன இயந்திரங்களை கொண்டு கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் திட்டத்தை எதிர்வரும் 4 மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட தீர்மான த்தின் விவரங்கள் வருமாறு, வரும் ஜூன் மாதம் 3ம் தேதி மதச்சார்பற்ற தற்போது கூட்டணியின் தலைவர்கள் பங்குபெறும் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வட சென்னையில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் 20ஆம் தேதி திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்து சிறப்பிக்க […]