உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமன செயல்முறை தொடர்பாக அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்திற்கான ஐந்து நீதிபதிகளின் பெயரை மத்திய அரசு சனிக்கிழமை அனுமதித்தது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவர்களின் பெயர்களை உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்த டிசம்பர் 13ஆம் தேதி பரிந்துரைத்தது. இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில், […]
supreme court
திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் தொடர்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. டெல்லியை சேர்ந்த நைம் அகமது என்பவருடன், ஏற்கனவே திருமணமான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்துள்ளார்.. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் நைம் அகமது குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.. இந்த தீர்ப்பை எதிர்த்து நைம் அகமது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
29 வார கருவை கலைக்க அனுமதி கோரிய 20 வயது பெண் ஒருவருக்கு பிறக்க வேண்டிய குழந்தையை தத்தெடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. 29 வார கருவை கலைக்க அனுமதி கோரி 20 வயதாகும் மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் உயிருக்கு ஆபத்து நேராமல் […]
நீதிமன்றங்களின் வேலை நேரம், வேலை நாட்கள் மற்றும் விடுமுறைகள் ஆகியவை அந்தந்த நீதிமன்றங்களால் உருவாக்கப்பட்ட விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர்; உச்ச நீதிமன்றம், இந்திய அரசியலமைப்பின் 145 வது பிரிவின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தின் நடைமுறை மற்றும் அதன் அமர்வுகள் மற்றும் விடுமுறைகளை உள்ளடக்கிய நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உருவாக்குகிறது. அதன்படி, உச்ச நீதிமன்ற விதிகள், […]
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இங்கிலாந்து நாட்டில் உள்ள பார்க்லே வங்கியில் 1,04,93,000 அமெரிக்க டாலரை முறையீடாக முதலீடு செய்திருக்கிறார் என்று புகார் எழுந்தது இது குறித்து அவர் மீது அமலாகத் துறை வழக்குப் பதிவு செய்தது. இதுகுறித்து டிடிவி தினகரன் மீது மேலும் 7 வழக்குகள் தொடரப்பட்டனர். இதனை அடுத்து அன்னிய செலாவணி மோசடி வழக்கு குறித்த ஆவணங்களை தனக்கு வழங்க வேண்டும் என்று […]
பீகாரில் நடந்து வரும் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்ப்புக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.. பீகார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கடந்த 7-ம் தேதி தொடங்கியது.. இரு கட்டங்களாக நடத்தப்பட இந்த கணக்கெடுப்பில் மக்களின் சாதி, துணை சாதி, பொருளாதார நிலை ஆகியவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.. இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.. அந்த மனுக்களில் பீகார் […]
வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடர்ந்த மத மாற்றம் தொடர்பான வழக்கு முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கட்டாய மத மாற்றத்தை எதிராக புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. குஜராத் மத சுதந்திரச் சட்டம், 2003 […]
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்த பொதுக்குழு கூட்டத்திலேயே மற்றொரு அறிவிப்பையும் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அதாவது, விரைவில் தொண்டர்களின் ஒப்புதலுடன் நிரந்தர பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை […]
காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகேதாது குறித்து விவாதிக்க கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகேதாது அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு வருகின்றது. கர்நாடக அரசின் முடிவு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்றும், மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு விசாரணையில் இருந்து வருகின்றது. மேகேதாது […]
திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. திருமணமான மகள், இறந்த தாயை சார்ந்து இருப்பதாக கருத முடியாது என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த வழக்கு ஒன்றில் அரசு ஊழியர் இறந்து பல ஆண்டுகள் ஆனதால், கருணை […]