கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கரூரில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த […]

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என அடையாளம் காணப்பட்ட நபரை நீதிமன்ற ஊழியர்கள் உடனடியாக கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சம்பவத்திற்கு முன்பு, “சனாதனின் அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாது” என்று கிஷோர் கத்தியதாக கூறப்படுகிறது.. எனினும் பி.ஆர். கவாய் முழுவதும் அமைதியாக இருந்தார். பின்னர், இதுபோன்ற சம்பவங்கள் தன்னைப் […]

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சுயாதீன விசாரணை நடத்தக் கோரி ஒரு பொது நல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையிலிருந்து சில குறிப்பிட்ட கசிவுகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. விசாரணை முடியும் வரை ரகசியத்தன்மையைப் பேணுவதன் […]

தமிழகத்தை உலுக்கிய கிட்னி திருட்டு தொடர்பான வழக்கை சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வறுமையால் வாடும் விசைத்தறி தொழிலாளர்களை ஏமாற்றி கிட்னியை விற்பனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மற்றும் திருச்சியை சேர்ந்த 2 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழ்நாடு மருத்துவம் […]

இந்த வாரம் நேபாளத்தில் மற்றும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.. மாநிலங்களின் மசோதாக்களை நிறைவேற்ற ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் ஆளுநர்களுக்கு உள்ள உரிமைகள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, பொது முக்கியத்துவம் வாய்ந்ததாகவோ அல்லது எந்த வகையிலும் பொதுமக்களைப் பாதிக்கக்கூடியதாகவோ இருக்கும் எந்தவொரு சட்டப் புள்ளியிலும் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற […]