திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சிறுமியை கடத்திச் சென்று கர்ப்பமாக்கிய வழக்கில் சித்தப்பா கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் கருப்பு. கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 17 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் திருத்தணி கோவிலுக்கு சென்று வருவதாக கூறி வெளியே சென்ற மகள் வீடு திரும்பாததால் கருப்பு மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து […]

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தற்போது எம்பி யாக இருந்து வரும் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக் கூடாது என சிவகங்கை காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்காக தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸின் மூத்த தலைவர்களான சுதர்சன நாச்சியப்பன், K.R ராமசாமி உட்பட […]

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நேற்றிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார். விஜய் மக்கள் இயக்கம் என்ற தனது அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றி அதற்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. மேலும் கட்சியின் கொள்கைகள் குறித்த விளக்கமும் அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சி ஆரம்பித்த உடனேயே கட்சியின் பெயரை பற்றிய […]

கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் டாக்டர்.திருமாவளவன் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டனர் . இந்த நிகழ்ச்சியில் சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக டெல்லி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் என்பவர் டெல்லி காவல் […]

சிவகங்கை மாவட்டத்தில் முடி வெட்டியதற்கு தந்தை கண்டனம் தெரிவித்ததால் 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவன் பாக்ஸ் கட்டிங் ஸ்டைலில் முடி வெட்டி இருக்கிறான். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது […]

மது பிரியர்களுக்கு, அடித்த போதையும் இறங்கும் அளவிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதுபானத்தின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு ரூ.44 கோடிக்கு மேல் டாஸ்மாக்கில் மது விற்பனை நடந்துள்ளது. தனியார் வசம் ஒப்படைக்கப்படாமல் அரசே ஏற்று நடத்தும் வாணிபங்களில் டாஸ்மாக்கும் ஒன்று. 43 சாதாரண வகை பிராண்டுகளையும், 128 பிரீமியம் வகை பிராண்டுகளையும், 35 பீர் வகைகளையும், 13 […]

திருச்சி மாவட்டம் முசிறி அருகே 2 சகோதரிகள் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. ஓட்டுனராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி சசிகலா என்ற மனைவியும் தர்ஷினி மற்றும் வேம்பு என்ற 2 பெண் குழந்தைகளும் 1 மகனும் இருந்தனர். இந்நிலையில் […]

சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ஆயுஷ் அமைச்சகத்துக்கு அன்புமணி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், சித்த மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சித்த ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வு (Siddha Wellness & Awareness Campaign ) என்ற தலைப்பிலான விழிப்புணர்வு இரு சக்கர ஊர்தி பேரணியை டெல்லியில் தொடங்கி கன்னியாகுமரி வரை தேசிய சித்த மருத்துவ நிறுவனம் […]

கேரள மாநில எல்லைப் பகுதியைச் சேர்ந்த களியக்காவிளையில் மகன் தாயை எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக மகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த வெள்ளறடை, காற்றாடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் நளினி(60). இவரது மகன் மோசஸ். மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான மோசஸ் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி […]

தமிழில் பேசியதற்காக 10 வயது மாணவனின் காது கிழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கேசவன். இவரது மனைவி குகன்யா. இந்த தம்பதியினரின் மகன் மனிஷ் மித்ரன். 10 வயதான சிறுவன் மித்ரன் ராயபுரத்தில் உள்ள தனியார் ஆங்கிலப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து […]