தமிழகத்தில் உள்ள குளிர்பான கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்‌ வகுக்கப்பட்டுள்ளது. அதை மீறினால்‌ நடவடிக்கை எடுக்கப்படும்‌ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம்‌ தொடங்கியுள்ளதால்‌, பொதுமக்கள்‌ வெயிலின்‌ தாக்கத்தைகுறைக்க, பலவித குளிர்பானங்கள்‌ மற்றும்‌ பழச்சாறுகளை அருந்தும்‌ சூழல்‌காணப்படுகிறது. இதனால்‌, தமிழகம் முழுவதும்‌ சாலையோர மற்றும்‌ குளிர்பானகடைகளில்‌, பரவலாக பொதுமக்களின்‌ நுகர்வு அதிகரித்துள்ளது. இந்ததருணத்தில்‌ சாலையோர மற்றும்‌ நிரந்த வணிகம்‌ செய்யும்‌ வணிகர்கள்‌,பொதுமக்களுக்கு தரமான மற்றும்‌ பாதுகாப்பான குளிர்பானங்கள்‌, பழச்சாறுகள்‌ வழங்குதலை உறுதி […]

தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள மதுபானக்கடைகள்‌ மற்றும்‌ மதுபானக்‌ கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌ கூறியதாவது; வருகின்ற 01.05.2023 திங்கட்கிழமை அன்று தொழிலாளர்‌ தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள்‌ மூடப்பட வேண்டுமென அரசால்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து எப்‌.எல்‌.1, எப்‌.எல்‌.2, எப்‌.எல்‌.3, எப்‌.எல்‌.3ஏ மற்றும்‌ எப்‌. எல்‌.3ஏஏ உரிமம்‌ பெற்ற ஹோட்டல்‌ மற்றும்‌ கிளப்புகளில்‌ இயங்கி […]

12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் பெரும் முதலீடுகளை ஈர்த்திடவும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினைப் பெருக்கிடவும், குறிப்பாக தென் மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திடும் நோக்கிலும் தமிழக அரசால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்தச் சட்டத்தில் இருந்தாலும், சில தொழிற்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் நேற்று, அமைச்சர்கள், தலைமைச் […]

தமிழக அரசு சமீபத்தில் தமிழகத்தில் 12 மணி நேர வேலை தொடர்பான சட்ட மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றியது இதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர் அதோடு பல்வேறு தொழிற்சங்கங்கள் இதற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தான் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்துடன் ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் இந்த சட்டம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் எதிர்ப்பு இன்னும் அடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், […]

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கியது. 10-ம் தேதி நடந்த ஆங்கிலம் வினாத்தாளில் முதல் பகுதியில் 1 முதல் 6 வரையில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு இணைச்சொல் விடையளிக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. வினாக்கள் தவறாக இருந்ததாக தவறுகள் இருப்பதாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் தெரிவித்தனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு […]

தருமபுரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தனியார்துறை நிறுவனங்களும்‌ – தனியார்துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துகொள்ளும்‌ “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு மாதத்தின்‌ மூன்றாம்‌ வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்துகொள்ளலாம்‌. இது ஒரு இலவச பணியே ஆகும்‌. இதன்‌ மூலம்‌ தனியார்‌ துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில்‌ […]

இலவச கட்டாயக்‌ கல்வி உரிமைச்‌ சட்டம்‌ 2009ன்படி 6 முதல்‌ 18 வயதுடைய அனைத்து குழந்தைகளையும்‌ முறையான பள்ளியில்‌ சேர்த்து கல்வி வழங்க வேண்டும்‌. அதன்படி ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து, மாநகராட்சி 7 ஊராட்சி, பேரூராட்சிகளின்‌ குடியிருப்புகளிலும்‌ பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள்‌ மற்றும்‌ மாற்றுத்திறன்‌ கொண்ட குழந்தைகள்‌, கணக்கெடுப்பு களப்பணி ஏப்ரல்‌ 2023 முதல்‌ இரண்டு வாரங்களிலும்‌ மற்றும்‌ மே 2023 இறுதி வாரத்திலும்‌ […]

தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தனியார்‌ பள்ளி இயக்குநர்‌ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2023-24ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ எல்கேஜி வகுப்பிலும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ நடைபெற்று […]

வீடற்ற 1,500 பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.45 கோடியில் இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்தும் அறிவிப்புகளை வெளியிட்டும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசினார். அப்போது வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் 4 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு ரூ.25 கோடியில் புதிய விடுதிக் கட்டிடங்கள் கட்டப்படும். […]

ரூ.1.76 கோடி செலவில் மாற்று திறன் குழந்தைகளை பராமரிக்க மாதம் தோறும் ரூ.4,500 மதிப்பூதியம் வழங்கப்படும். சட்டப்பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன்; நவீன கருவி வாசிக்கும் திட்டம் ரூ.1.4 கோடி செலவில் உயர்கல்வி பயிலும் பார்வை குறைவான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூபாய் 14,000 உதவித்தொகை வழங்கப்படும். […]