திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(40) பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவரது மனைவி சபுராபீவி என்கின்ற நிஷா (35) இருவரும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் ஆனால் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். சதீஷ்குமார் மீது காவல் நிலையத்தில் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் சதீஷ்குமார் தன்னுடைய மனைவி […]

பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் ரோஜா ராஜசேகர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளர் ஆக இருந்த இவர், ரோஜா கோல்டு ஹவுஸ் நகை கடை உரிமையாளராகவும் இருந்தார். இவர் தனது கடையில் திருட்டு நகை வாங்கியதாக கூறி திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் உமா சங்கரி என்பவர் ரோஜா ராஜசேகரையும் அவரது மனைவியையும் கைது செய்துள்ளார். தன்னை தனது மனைவிக்கு முன்பாக தரக்குறைவாக நடத்தியதாக கூறி உறவினரிடமும் நண்பர்களும் […]

பக்ரீத் பண்டிகைக்கு திருச்சியில் மாநகராட்சி அங்கீகாரம் இல்லாத இடங்களில் மாடுகளை வெட்டுவதைத் தடுக்கக் கோரிய மனு தொடர்பாக திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஒரு பொதுநல மனுவில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளை உறுதி செய்வதற்காக, மாநில அரசு/கார்ப்பரேஷனால் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, வேறு எந்த […]

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மர்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சில இடங்களில் இயங்கி வரும் பள்ளிகளில் போதுமான இடவசதி இல்லை, அடிப்படை வசதி இல்லை, சுத்தம் இல்லை, சரியான கட்டிடம் இல்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அரசு அதிகாரிகளுக்கு பள்ளிகல்வி துறை சார்பில் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் […]

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இருக்கின்ற தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி( 60), சிவகுமார் (48) இருவரும் நேற்று முன்தினம் மதியம் தச்சங்குறிச்சி டாஸ்மாக் கடையில் மது அருந்தி உள்ளனர் அதன் பிறகு முனியாண்டிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகைய நிலையில் தான் முனியாண்டி உடன் […]

திருச்சி மாவட்டம் வாளாடி அருகே கடந்து 2ம் தேதி ரயில்வே தண்டவாளத்தில் 2 டயர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற கன்னியாகுமரி விரைவு ரயில் அந்த டயர்கள் மீது மோதலில் ரயில் இன்ஜினில் இருந்த மின் இணைப்பு பெட்டி சேதம் அடைந்தது. இதனால் அடுத்தடுத்து நான்கு பெட்டிகளில் மின்சார தடை ஏற்ப்பட்டுள்ளது.. ரயில் ஓட்டுநரின் சாமர்த்தியம் காரணமாக, மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருத்தாச்சலம் ரயில்வே காவல்துறையினர் வழக்கு […]

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் பகுதியில் கடந்த 1989 ஆம் ஆண்டு புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி, தூய மரியன்னை தொடக்கப்பள்ளி ஜெரிக்கோ உடல் ஊனமுற்றோர் பள்ளி என 3 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் நிர்வாகியாக அன்பரசு என்பவரும், தலைமை ஆசிரியராக அந்தோணி என்பவரும் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் நீர்நிலைகளை ஆக்கிரமித்து பள்ளியை […]

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாலூரை சேர்ந்தவர் தமிழரசன் (50). இவர் தன்னுடைய மனைவியின் சொந்த ஊரான சோமரசம் பேட்டை அருகே உள்ள புங்கனூர் கீழத்தெருவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் அதே பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் அவர் தற்காலிக எடையாளராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மகன் பிரசாந்த் (27) என்பவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். இதே போல அவர்களது உறவினர்களான புங்கனூர் மேல தெருவை […]

முதல்வர் ஸ்டாலின் திருச்சி வருகையின் போது ரேஷன் அரிசி பொருட்கள் ஏற்றி சென்ற லாரிகள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், அலைக்கழிக்கப்பட்டு லோடு ஏற்றிச்சென்ற லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காவல்துறையினரின் அராஜக போக்கை கண்டித்தும், அத்தியாவசிய ரேசன் பொருட்களை ஏற்றிச் சென்ற குட்செட் லாரிகளை அலைக்கழித்து விபத்துக்குள்ளாகிய செயலைக்கண்டித்தும் மலைக்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருச்சியில் ரயில்வே குட்செட் டிரைவர்கள் நல சங்கம் சார்பில் […]

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கோடை மழையுடன் ஆரம்பமானாலும் கோடையில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் திருச்சியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து 100 டிகிரிக்கு அதிகமாகவே இருக்கிறது கடந்த மே மாதம் வெயில் தாக்கம் உச்சத்தை எட்டியது. கடந்த கோடை காலங்களை விடவும் இந்த முறை வெப்பத்தின் அளவு அதிகமாகியுள்ளது. ஆனால் தற்போது மே மாதம் முடிந்துவிட்ட நிலையில், சென்ற மாதத்தை விட […]